கோவில் சுவரில் கிறிஸ்துவ பிரசாரம்! வெட்கமா இல்லையா?! #தூ

periambur chembiom amman temple3 - 2026

சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை… என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.

சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியிலுள்ளது அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில். சென்னை பெரம்பூர் செம்பியம் ராகவன் தெரு பகுதியில் உள்ள இந்த அம்மன் கோயில் சுற்றுச் சுவரில், கோயிலுக்கு உரிய வெள்ளை அடித்து செம்மண் காவி தீட்டவில்லை. மாறாக, சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் காண்போரை கொதிப்படைய வைத்துள்ளது.

“இயேசு கிறிஸ்து அன்றும் இன்றும் என்றும் மாறாது இருக்கிறார் .”
– என்று கோவில் சுவரில் வாசகம் எழுதிப் போட்டிருப்பது கடந்து செல்லும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

periambur chembiom amman temple1 - 2026

இந்துக் கோவில் சுவர்களில் வந்து பைபிள் வாசகம் எழுதுவது, இந்து கோவில் சுவர்களை ஒட்டி புதியபுதிய சர்ச்சுகள் கட்டுவது, இதுதான் கிறிஸ்தவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை என்று குமுறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், “எம்மதமும் சம்மதம் ” என்று பரந்த மனசு பேசி பாழாய்ப்போன இந்துக்களே நன்றாக தூங்குங்கள். செம்பியம் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் விரைவில் “மேரி அம்மன் ஆலயமாக” மாறப் போகிறது. அப்பொழுதும் நீங்கள் சொல்வீர்கள் எம்மதமும் சம்மதம் என்று ….

periambur chembiom amman temple2 - 2026

எந்த ஒரு இந்துவும் கிறிஸ்தவ சர்ச்சுகளின் காம்பவுண்ட் சுவர் களில் ” சிவனே மெய்யான தெய்வம்” “சிவன் அழைக்கிறார்” ஓம் சக்தி பராசக்தி என்று எங்காவது எழுதியதுண்டா? அவ்வாறு எழுதவந்தால், அதை கிறிஸ்தவர்கள் அனுமதித்த வரலாறு தமிழகத்தில் ஏதாவது ஓரிடத்தில் உண்டா? இந்துக்களே யோசனை செய்யுங்கள்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories