மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்: கேரள சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக கவர்னர் பேச்சு

Published:

கேரள சட்டப்பேரவையில் பஜ்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் சதாசிவம் உரையாற்றினார். அப்போது சோலார் மின் திட்ட முறைகேடு புகாருக்கு பொறுப்பேற்று கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி பதவி விலக கோரி மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரையை படிக்க விடாமல் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

அமளிக்கு நடுவே பேசிய ஆளுநர் சதாசிவம் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமாதானபடுத்தும் வகையில் பேசிய ஆளுநர் சதாசிவம் உங்களது போராட்டம் அரசுக்கு எதிரான என்பது தெரியும் அதனை மக்களிடம் தான் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினார். மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று சட்டப் பேரவையில் ஒரு ஆளுநர் கூறியிருப்பது கேரள சட்டப் பேரவை வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என கருதப்படுகிறது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Related articles

Recent articles

spot_img