தைவான் நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் தைனான் சிட்டி கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி மாயமாகியுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

