வக்கீல், எஞ்சினியர் சான்றிதழ்கள் போலியாக விற்பனை: பெண் உள்பட 3 பேர் கைது

fake-certificate1 சென்னை: வக்கீல், (எல்.எல்.பி.,) பொறியாளர் (பி.இ.) சான்றிதழ்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட பெண், மாநில பாமக மகளிர் அணி துணைத் தலைவி. தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சென்னையைச் சேர்ந்த அருண்குமார், அழகிரி, மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் பார் கவுன்சிலில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்திருந்ததாகவும், அவர்கள் போலியான சான்றிதழ்களை வழங்கியதாகவும் புகார் அளித்தார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது பெரம்பூரைச் சேர்ந்த அருண்குமார் (36), கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரி (32), சேலம் குரங்குச் சாவடியைச் சேர்ந்த கணேஷ்பிரபு (28) ஆகியோர் போலி சான்றிதழ்களை தயாரித்து அளித்தது தெரியவந்தது. இதை அடுத்து அவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரி எல்.எல்.பி. படிப்பு தொடர்பாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். அந்த விளம்பரத்தைப் பார்த்து அருண்குமார் அவரை அணுகியுள்ளார். வகுப்புக்குச் செல்லாமல், தேர்வு எழுதாமல் எல்.எல்.பி. சான்றிதழ் வாங்கித் தருவதாகக் கூறிய சண்முகசுந்தரி, ரூ. 3.5 லட்சம் பெற்றுக் கொண்டு போலியாக பந்தேல்கண்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது போன்ற போலி சான்றிதழை வழங்கியுள்ளார். மேலும் சண்முகசுந்தரியும் அவரது கணவர் குமாரும் போலியான சான்றிதழ்கள் மூலம் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முயன்றுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த கணேஷ்பிரபுவும் இவர்களுடன் சேர்ந்து எல்.எல்.பி., பி.இ., பி.எஸ்சி, பள்ளிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை போலியாக தயாரித்து வழங்கியது தெரிய வந்தது. இந்த மோசடி சம்பவத்தில் மாநிலம் முழுவதும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே 10 பேருக்கு எல்.எல்.பி. சான்றிதழ்கள் போலியாக வழங்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சண்முகசுந்தரி பா.ம.க.வின் மாநில மகளிர் அணி துணைத் தலைவியாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். fake-certificate

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories