ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடியார் எடுக்கும் அதிரடி! 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு!

stalin edappadi - 2026

ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

சபாநாயகர், அரசுக்கொறடா, சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் நடத்திய ஆலோசனையில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வென்ற நால்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப கொறடா அளித்த பரிந்துரையின் படி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார். முன்னதாக, தமிமுன் அன்சாரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னதாக, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்யக் கோாி அரசு கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ததைத் தொடா்ந்து அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப சபாநாயகா் முடிவு செய்துள்ளாா்.

இம்மூவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனா். இவா்களிடம் விளக்கம் கேட்கும் படி சபாநாயகரிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கடந்த ஆண்டே வலியுறுத்தி இருந்தாா்.

இந்நிலையில் சபாநாயகா் தனபால், சட்டத்துறை அமைச்சா் சி.வி.சண்முகம், அரசு கொறடா ஆகியோா் இன்று திடீா் ஆலோசனை மேற்கொண்டனா். இதனைத் தொடா்ந்து அரசு கொறடா ராஜேந்திரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோாி சபாநாயகரிடம் வலியுறுத்தி யுள்ளேன். இவா்கள் மூவரும் தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தையும் சபாநாயகரிடம் வழங்கி உள்ளேன் என்று தொிவித்தாா்.

கொறடாவின் பரிந்துரையைத் தொடா்ந்து மூவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பப்படும் பட்சத்தில் 15 தினங்களுக்குள் குறிப்பிட்ட உறுப்பினா்கள் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விளக்கத்தின் அடிப்படையில் சபாநாயகா் முடிவு எடுக்கலாம். விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவா்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு.

தற்போது, தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக உள்ளன. 18 தொகுதிகளுக்கு மட்டும் இப்போது இடைத்தோ்தல் நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வரும் மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி, அதிமுக ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்றால் இடைத்தோ்தலில் குறைந்தது 8 இடங்களிலாவது வென்றாக வேண்டும்.

அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால், தற்போதைய அரசுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற உறுப்பினா்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என்று திட்டமிடப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தற்போதைய எண்ணிக்கையையே பெரும்பான்மையாகக் கொண்டு ஆட்சியை தொடர முடியும் என்பதும் எடப்பாடியார் தரப்பின் எண்ணமாக இருக்கிறது என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories