முதலமைச்சர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை !

Published:

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற  தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு வருகிற 16ம் தேதி  நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர்   ரங்கசாமி வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ரங்கசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த  போது  அவரது வீட்டின் பின்புறம், கார் நிறுத்துமிடம், மாடிப்படிகள், தோட்டப் பகுதியிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். 10 நிமிடம் இந்த சோதனை நீடித்தது.

முதலமைச்சர்  வீட்டில் பணம் மற்றும் ஏராளமான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புகார் அளித்தவர் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஓட்டு பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கதிர்காமம் பகுதியில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img