சென்னை: தமிழகத்தில் பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதனால் போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. 12–வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்கள் இதனை ஆதரித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் தி.மு.க.வின் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 14 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த 14 தொழிற்சங்கங்களும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் எப்போதும் போல் இயல்பான பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. இதுபோல மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.
Hot this week
ஆன்மிகச் செய்திகள்
அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கிரைம் நியூஸ்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

Topics
ஆன்மிகச் செய்திகள்
அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
கிரைம் நியூஸ்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
அரசியல்
நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
அரசியல்
‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்!
இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

