பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்து… வனிதாவை கட்டம் கட்டிய போலீஸ்!

vanitha biggboss - 2026 இரண்டாவது கணவரின் மகளைக் கடத்தி வந்ததாக நடிகை வனிதா விஜயகுமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது தெலங்கானா மாநில காவல் துறை! இதை அடுத்து வனிதாவைக் கைது செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டுக்கு தெலங்கானா மாநில போலீசார் வந்ததாகக் கூறப் படுகிறது.

இது குறித்து விஜய் டிவி.,யும் உறுதிப் படுத்தியுள்ளது. மேலும், வனிதா விஜயகுமாரிடம் வழக்கமான விசாரணை நடத்ததான் போலீஸார் வந்ததாகவும் கூறியது. இருப்பினும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்றும், அவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கான எந்த முடிவும் டிவி நிர்வாகத்தால் எடுக்கப் படவில்லை, இப்போதும் பேச்சுதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் டிவி தரப்பினர். இதே போல் இன்னொரு பங்கேற்பாளர் மீதும் ஒரு மோசடி வழக்கு இருப்பதாகவும், சென்னை போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாகவும் டிவி.,தரப்பில் கூறப்பட்டது.

நடிகர் விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார்! இவருக்கு முன்னாள் கணவர்கள் 2 பேர். முதல் கணவர் நடிகர் ஆகாஷுக்கு ஒரு மகன் உள்ளார். வனிதாவின் இரண்டாவது கணவர் தொழில் அதிபர் ஆனந்தராஜூக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரை பிரிந்து 3-வதாக நடன இயக்குனர் ராபர்ட் உடன் வாழ்ந்து வந்தார்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

vanitha vijayakumar - 2026தற்போது, விஜய் டிவி,யில் நடத்தப் பட்டு வரும் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார் வனிதா விஜயகுமார்.

இவர், இரண்டாவது கணவரை பிரிந்தபோது, அவர்களது மகள் தனது தந்தையுடன் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பு தனது மகளைப் பார்க்க ஐதராபாத் சென்ற வனிதா, கணவர் ஆனந்தராஜுக்குத் தெரியாமல் மகளை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டாராம். இது குறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில், தெலங்கானா காவல்துறையினர் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வனிதாவை தேடி சென்னை வந்தனர். வனிதா தலைமறைவாக உள்ளார் என்று கூறி வழக்கை விசாரிக்காமல் கிடப்பில் போட்டனர்.

இந்நிலையில் வனிதா, விஜய் டிவி.,யின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால், அவர் தலைமறைவாகவில்லை என்பது உறுதியானது. இதை அடுத்து ஆனந்தராஜ், மீண்டும் தெலங்கானா காவல்துறைக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடைய வனிதா விஜயகுமாரை கைது செய்வதற்காக தெலங்கானா காவல்துறையினர் சென்னை வந்தனர். பூந்தமல்லியில் பிக்பாஸ் அரங்கம் அமைக்கப்பட்டுள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

வனிதாவை கைது செய்ய ஒத்துழைக்குமாறு, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படவில்லை. இதனால் அவர்கள் நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தமிழக போலீஸிடம் உதவி கோரினர். போலீசார் டிவி நிகழ்ச்சித் தயாரிப்பாளரை அழைத்து வனிதாவையும், கடத்தப்பட்டதாகக்கூறப் பட்ட சிறுமியையும் போலீசிடம் ஒப்படைக்க அறிவுறுத்தினர்.

மேலும், கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை வனிதாவை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில், பிக்பாஸ் அரங்கத்திற்குள் புகுந்து வனிதாவை கைது செய்து அழைத்துச் சென்று குழந்தையை மீட்போம் என்று போலீஸார் கூறினராம்.

இந்நிலையில், கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் பதுங்கும் இடமாகவும் அவர்களைப் பாதுகாக்கும் இடமாகவும் பிக்பாஸ் வீடு உள்ளது என்று தெலங்கானா போலீஸார் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories