தமிழர்கள் படுகொலையில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவை இளைஞரிடம் விசாரணை

புதுச்சேரி: ஆந்திர மாநில போலீஸாரால், திருப்பதி வனப் பகுதியில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுச்சேரியில் இளைஞரிடம் விசாரணை நடத்தினர். திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் என்ற காரணம் கூறி, 20 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தால், நாடு முழுவதும் ஆந்திர மாநில போலீஸாருக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர உயர்நிதிமன்றமும் விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இது விவகாரத்தில், தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஆந்திர மாநில போலீசாரிடம் பிடிபட்டு தப்பி வந்த நபர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவ்வாறு தப்பி வந்தவர்களில் ஒருவரான திருவண்ணாமலை மாவட்ட மலை கிராமமான ஜமுனா மருதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளங்கோவிடம் மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரி இந்திரா நகரில் உள்ள அரசு விருந்தினர் விடுதியில் வைத்து இந்த விசாரணை நடத்தப் பட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணைய துணைப் பதிவாளர் பாஸ்கர் தலைமையில் விசாரணை காலை தொடங்கி மதியம் 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் நடந்தது. இந்த விசாரணைக்குப் பின்னர் இளங்கோவை அதிகாரிகள் தங்களுடன் அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது, ஆந்திர மாநில போலீசாரின் சித்ரவதை குறித்து இளங்கோ தெரிவித்ததாகவும், பாதுகாப்பு கருதி அவரை புதுவைக்கு அழைத்து வந்து விசாரித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

Topics

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Entertainment News

Popular Categories