கேரளாவிற்கு நூதன முறையில் தடை செய்ப்பட்ட புகையிலை கடத்த முயற்சி

Published:

பாவூர்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு நூதன முறையில் போதை பொருள் கடத்த முயற்சி

பாவூர்சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியே காய்கறி லோடு ஏற்றிவந்த ஆட்டோவை சோதனையிட்டனர் அப்போது காய்கறி மூட்டையில் மறைத்து வைத்து கேரளாவிற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தி செல்வது தெரியவந்தது .
திருநெல்வேலி – தென்காசி சாலையில் கே.டி.சி.நகர் அருகேயுள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் .
அப்போது ஆலங்குளத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கனி ஏற்றி வந்த ஆட்டோவை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரா.சக்திகணேஷ்(வயது 40) என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவை சோதனையிட்டனர்.
அதில் காய் மூட்டைகளின் அடியில் பண்டல்களில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ 1 லட்சம் ஆகும் ,இதையடுத்து ஆட்டோவை பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
கீழப்பாவூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜநயினார், செங்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரராஜ், ஆலங்குளம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோரிடம் பிடிப்பட்ட ஆட்டோவை பாவூர்சத்திரம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img