கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும்!

Published:

naga-panchami
naga-panchami

இன்று கருட பஞ்சமி. இதனை நாக பஞ்சமி என்ற பெயரிலும் கடைபிடிப்பதுண்டு.

இந்த பண்டிகையையொட்டி பக்தி சிரத்தையுடன் சர்ப்ப சூக்தம் பாராயணம் செய்வது வழக்கம். இதன் மூலம் அனைத்து சர்ப்ப தோஷங்களையும் நீக்கி விஷ பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும்.

இந்த நாளில் அவ்வாறு செய்பவர்களுக்கு சந்தான ப்ராப்தி, காரியசித்தி, வெற்றி கிடைப்பதோடு காலசர்ப்ப தோஷங்கள், நாக தோஷங்கள் குறையும். நோய்கள் குணமாகும்.

நாக பஞ்சமியைப் பற்றி சுருக்கமாக அறியலாம். இதன் முக்கியத்துவம் ஸ்காந்த புராணத்தில் பரமேஸ்வரனால் விளக்கப்பட்டுள்ளது.

ஸ்ராவண சுத்த பஞ்சமி நாக பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது. ஆதிசேஷனின் சேவையில் மகிழ்ச்சி அடைந்த ஶ்ரீமகாவிஷ்ணு ஏதேனும் வரம் கேட்கும்படி கூறவே, தான் உத்பவித்த சிராவண சுக்ல பஞ்சமியன்று மானுடர்கள் சர்ப்ப பூஜை செய்ய வேண்டும் என்று கோரினார். ஸ்ரீ மகாவிஷ்ணு ஆதிசேஷனின் விருப்பத்தை அறிந்து சிராவண சுக்ல பஞ்சமி நாளில் மக்கள் நாகங்களை வணங்குவார்கள் என்று ஆசியளித்தார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

எனவே அப்போதிருந்து இந்த நாளில் பாம்புக் கடவுள்களை வணங்குவது போன்ற பூஜைகள் செய்யப்படுகின்றன. அதனால் பக்தர்களின் குறைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறுகிறன்றன.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img