மனிதாபிமானத்தை தேடி – ஹேமோ

எங்கள் வீட்டில் என்றும் காலை பொழுது மிகவும் பரபரப்பானது. நான் மட்டும் கொஞ்சம்…. இல்லை…. இல்லை… ரொம்ப சோம்பேறி….. காலை என்பதே 8 மணிக்கு மேல்தான்…. வெயில் தாங்காமல்… குளிர்சாதன வசதி இல்லாததால்…. மின்சாரம் சரியாக வரததால்… காற்றுக்காக ஏங்கி ஹாலில் தான் படுக்கை…. எப்பொழுதும் போல் ஒரு நாள் விடியற்காலை 5 மணிக்கு அப்பா…. அம்மா….. இங்கே வாங்க…… என்று என் சின்ன சிங்கம் கர்ஜித்தது. பாருப்பா நம்ம ரூமுல பூனை குட்டி போட்டிருக்கு என்ற எனது மகனின் வியப்புக் குரலுடன் என் காலை பொழுது அன்று மட்டும் விடியல் காலையில் தொடங்கியது. இதை கேட்டதும் கிரிக்கெட் தவிர மற்றவற்றை பற்றி செவிசாய்க்காமல் என்னோடு தூங்கி கொண்டிருந்த என் முதல் மகனும் எழுந்தான். ஒன்றல்ல…. இரண்டல்ல….. அழகழகாக ஐந்து சின்னஞ்சிறு குட்டிகள்… அதன் அழகு எங்களை கவர்ந்தது உண்மை. ஆனாலும் நாங்கள் மனிதர்கள் அல்லவா. எண்ணங்கள் பறக்க தொடங்கியது. எங்களின் தூங்கும் அறை மிகப்பெரியதல்ல. அதில் எப்படி பூனைக்கும் இடம் அளிப்பது. பூனை வெளியே போனதும் குட்டிகளை வெளியேற்றலாம் என நான் முடிவு எடுத்ததை எனது இரண்டு மகன்களும் தடுத்தனர். நாட்டில் வேண்டுமானால் ஆட்சி மாறி மாறி வரும்…. வீட்டில் என்றும், எப்போதும் அம்மாவின் ஆட்சி என்பதால், அம்மாவிடம் முறையிட்டனர். அம்மா…. பாவம்மா குட்டி பூனைகளே…. நடக்க கூட முடியலே… வெளியே விட்டா அதை நாய் சாப்பிடும்…. இங்கேயே இருந்துட்டு போகட்டும்… கொஞ்சம் வளர்ந்ததும் வெளியே விடலாம்…. இதனை என் மனைவியும் ஆமோதித்து… மேலும் சொன்னால் இந்த கடுவன் பூனை வெளியே குட்டிகளை சாப்பிட காத்து கொண்டிருக்கு என்று கூறி, குட்டிகள் இன்னும் 10 நாளில் பெரிசாயிடும்… நாம எல்லாரும் அது வரை ஹாலில் படுத்துக்கொள்ளலாம் என்று சொன்னதும், மனைவியின் சொல்லே மந்திரம் என்று ஏற்று, சுற்று வட்டாரத்தின் அறிவுரைகளை மீறி எங்கள் வீட்டில் பூனைக்கு இடம் கொடுக்கப்பட்டது. எங்கள் அறையில் நன்று வளர்ந்து வந்த பூனைக்குட்டிகள் அறையில் ஓடி விளையாட ஆரம்பித்ததும் வரத் தொடங்கியது அறிவுரைகள். பூனை வீட்டில் இருந்தால் ஆகாது. அது வாழ்க்கையை அது பார்த்து கொள்ளட்டும்… மிருகத்தின் மேல உனக்கு என்ன திடீர் அக்கறை…. உனக்கு படுக்க இடம் இல்லை… பூனைக்கு இடம் தேவையா? உனக்கு ஏன்டா இந்த வம்பு… பேசாம வெளியே கொண்டு போய் விடு…. நல்ல விஷயங்கள் எதுவும் ஏறாத மரமண்டையில் இந்த அறிவுரைகள் நன்றாக ஏறியது… இருந்தாலும் குட்டிகளின் மேல் இருந்த என் மகன்களின் அன்பு என் மனைவியை யோசிக்க வைத்தது… மனைவிக்கோ என் இரண்டு மகன்களின் விருப்பத்தை மாற்றிட மனம் இல்லை. நன்கு வசம் கண்ட பூனை குட்டிகளின் அம்மாவோ எங்கள் வீட்டை விட்டு செல்ல மறுத்தது. என் மனைவியின் அறிவுரைப்படி குட்டிகளின் அம்மாவோட பூனை குட்டிகளை எங்கள் வீட்டின் மாடி படிக்கட்டின் கீழே குடித்தனம் வைத்தோம். நாய்களின் பசி வேட்டையிலிருந்து குட்டிகளை காப்பாற்ற இந்த இடம் தாய் பூனைக்கு உதவியது. எங்கள் வீட்டின் பாலை குடித்து நன்கு வளர்ந்தாலும் அதற்கு பூனைக்கு எலிகளையும், அணில்களையும் மிகவும் பிடித்திருந்தது. தாய் பூனை தினம் தினம் எலிகளையும், அணில்களையும் கொண்டுவர அதை பூனை குட்டிகள் சாப்பிட்டதை என் மனைவி, என் அம்மாவுடன் என்னையும் சேர்த்து என்னை சுற்றி இருந்த பலர் விரும்பவில்லை. எனது பிள்ளைகளுக்கு பூனை குட்டிகளின் மேல் இருந்த பாசம் எங்களை எந்த முடிவும் எடுக்க விடாமல் தடுத்தது. இப்படி 20 நாட்கள் ஓடியது. எல்லோரும் என்னை குடைய ஆரம்பித்தனர். இந்த பூனைகளின் தொல்லை தாங்க முடியவில்லை… அதை வெளியேற்று என்று தொந்தரவு செய்ய நானும் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பாக, எனது சுய அறிவை மறந்து இரண்டு குட்டிகளை பக்கத்தில் உள்ள பூங்காவில் விடவும் மற்ற இரண்டு குட்டிகளோடு தாய் பூனையை என் நா(வீ)ட்டை விட்டு கடத்தவும் முடிவு செய்தேன். எனது மனைவியும், மகன்களும் மனதில் குறையுடன் என்னுடன் உடன்பட்டனர். இருப்பினும் என் நா(வீ)ட்டை விட்டு வெளியேற மறுத்த தாய் பூனை வாசலிலேயே இருந்தது பிடிவாதம் பிடித்தது. விடப்பட்ட இரண்டு குட்டிகளில் ஒன்று என் வீடு திரும்பியது மற்றொன்றை பற்றிய விவரம் தெரியவில்லை. இது எங்களின் மனதை நெருடியது…..குட்டிகளின் ஆட்டம், ஓட்டம் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை தந்தது. அதனை கருத்தில் கொண்டு, வெளியே போரட்டம் நடத்திய பூனையின் போரட்டத்தை எங்கள் வீட்டின் அரசாங்கம் அதாவது என் மனைவி ஏற்றுக்கொண்டதால், பூனையின் பிடிவாதம் வெற்றி பெற்றது. மனைவி, மக்களின் அன்பு கட்டளையின் காரணமாக மீண்டும் எங்களது மாடிப்படிக்கட்டின் கீழேயே வெற்றிகரமாக பூனை தன் குட்டிகளுடன் குடியேறியது. குடும்பத்துடன் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. பூனைகளை யாராவது வளர்க்க முன் வந்தால் தந்து விடலாம் எனவும், அதுவரை அவற்றை இங்கேயே வளர்ப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. எல்லோரிடமும் பூனைகுட்டி என் வீட்டில் இருப்பது சொல்லப்பட்டது. எங்களின் மகிழ்ச்சியை அன்று இரவு நடந்த சம்பவம் முடித்தது. நடக்க ஆரம்பித்த குட்டிகள் வெளியே செல்ல இரவு வேளையில் நாய் ஒரு குட்டியை கொன்று தனது நீண்ட நாள் தோல்வியை சரி செய்தது. இதை தொடர்ந்து மறுநாளே மற்றொரு குட்டியையும் தாய் பூனை நாயிடம் இழந்தது. ஒரு மாதம் வளர்த்த என் மனைவி, மக்களை இந்த தொடர் இழப்பு பாதித்தது. என் மகன்களின் கண்ணீர் என்னை மிகவும் பாதித்தது. வளர்ந்து மீதி இருந்த இரண்டு குட்டிகளோடு எங்களை பரிதாபமாக பார்த்து விட்டு இனியும் இங்கு பாதுகாப்பில்லை என்று தாய் பூனை குட்டியுடன் எங்களை விட்டு விலகி சென்றது. குற்ற உணர்ச்சியில் நான் தவித்த போது… எனக்கு பல அறிவுரைகள் கிடைத்தன… நாம என்ன பண்றது… அதுக்குத்தான் கடவுள் அதுக்கு பல குட்டிகளை தரான் என்றார் ஒருவர்… நம்மால ஆனத நாம செய்தாச்சு…. இதுக்கு மேல என்ன பண்ண முடியும் என்றார் ஒருவர்… நாம என்ன கடவுளா? அது அது விதிப்படிதான் நடக்கும் என்றார் ஒருவர்… நம்மால முடிஞ்சதை செஞ்சாச்சு…. இதுக்கு மேல எப்படி அதை காப்பாத்த முடியும் என்றார் ஒருவர்…. இந்த மனிதர்களின் வாதத்தில் தொலைந்து போன என் மனிதாபிமானத்தை தேடத்தொடங்கினேன் அமைதியாக…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories