December 6, 2025, 8:01 AM
23.8 C
Chennai

இந்திய காதலர் தினம் கொண்டாடினா என்ன…?!

book-lovers-day இது இலக்கியக் காதல்… இந்தியக் காதல்…. காதல் இல்லாம.. நம்ம பரம்பரை இல்லை! காதல் இல்லாம நம்ம பக்தி இலக்கியங்கள்கூட இல்லைன்னா… அப்படிப்பட்ட காதலுக்கும் காதலர் தினத்துக்கும் எவ்ளோ முக்கியத்துவம் நாம குடுக்கணும்? காதலர் தினம்னு யாரோ ஒரு பாதிரியார் பேரைச் சொல்லி இங்க மார்க்கெடிங் பண்ணிக்கிட்டிருக்காங்களே…! நம்ம நாட்டு புராதன காதலர் தினம்னு ஒண்ணு தொடங்கலாம்னு பார்க்கறேன்.. புது வகை மார்க்கெட்டிங்தான்! கம்பராமாயணத்துல… (ஐய…. இன்னா சார்… நீங்க?! எப்ப பாத்தாலும் ராமாயணம் மகாபாரதம்னுக்கிட்டு….ன்றீங்களா?) ராமாயணத்துல சீதையை கண்ணுல காமிச்சி… ராமனோட மனசுல சூட்சுமமா இருக்கற காதலை ஜெயிக்க வைக்கிறதுக்காக விஸ்வாமித்திரரு.. நடையா நடந்து… ராமனை மட்டும் தனியா கூட்டிக்கிட்டு…. ஜனகபுரியான மிதிலைக்குப் போயி… அப்படியே அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினள்னு கம்பனைப் பாட வெச்ச அந்த ஸீனை நிறைவேத்தினதுக்காக… அந்த தினத்தை காதலர் தினம்னு நாம கொண்டாடிக்கலாம்… அப்புறம் மகாபாரதத்துல… ருக்மிணிங்கற சின்னஞ்சிறுமி… கண்ணன்ங்கிற இளைஞனைப் பத்திக் கேள்விப்பட்டு… கேள்விப்பட்டு.. மனசில் ஆசையை வளர்த்துக்கிட்டு.. நெஞ்சிலே காதல் கொண்டு… அதுக்காக காதல் கடிதமெல்லாம் எழுதி… ஒரு ஏழை அந்தணனின் உதவியை நாடி… அவர் மூலமா கடிதம் கொடுத்து…. தன்னை கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்துக்க ஒரு வழியைக் காண்பித்து… காதலில் ஜெயித்த அந்த தினத்தை நாம் காதலர் தினமா கொண்டாடலாம்… அப்படியும் இல்லையா…. இருக்கவே இருக்காரு.. நம்ம வேங்கடாசலபதி! அம்மையார் பத்மாவதி – அலமேலுமங்கையைக் கரம்பிடிக்க எத்தனை தூது, எத்தனை சமரசம்… எத்தனை நிபந்தனை எல்லாம் தாண்டி கரம் பிடித்த அந்த தினத்தை காதலர் தினமா கொண்டாடலாம். அப்படியும் இல்லையா…? இதெல்லாம் தெய்வங்கள் மனித உருவெடுத்து வந்து காதலில் வெற்றி கண்டதா நாம கொண்டாடிக்கிட்டிருக்கிற விசயங்கள்… ஆனா…. நம்ம திருமங்கை மன்னர்னு ஒருத்தர் இருக்காரே… அவரு… குமுதவல்லின்னு ஒரு மங்கையைக் காதலித்து அவளைக் கரம்பிடிக்க என்ன பாடெல்லாம் பட்டாரு? கடைசியில எல்லா நிபந்தனைகளுக்கும் உட்பட்டு… அப்படி ஒரு மாதரசியைக் கரம்பிடிச்சதால உலகமே கொண்டாடுகிற ஒரு ஆழ்வார் ஸ்தானத்துக்கு உயர்ந்து நின்னாரு..! காதல்னா அப்படியில்ல வாழ்க்கையில் ஒரு ஆணை உயர்த்தணும்?! அப்படி திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரை எத்தனையோ இடையூறுகளையும் தாண்டி கரம்பிடிச்சி.. காதல்ல ஜெயிச்ச அந்த தினத்தை நாம காதலர் தினமா கொண்டாடினாத்தான் என்ன..? எப்படியும் காதலர் தினம்னு ஒரு தினத்தை நாம கொண்டாடுறதுதான் நோக்கம்னா… இப்படி ஒரு இந்தியத் தனமான காதலர் தினத்தை… அல்லது திருமங்கை மன்னரைப் போன்ற தமிழர்த்தனமான காதலர் தினத்தைக் கொண்டாடினாத்தான் என்ன….? எப்படி நம்ம ஐடியா…?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories