அடுத்து வருமா “அம்மா” டீக் கடை?

amma_unavagam மாலை வழக்கம்போல் சகாக்கள் சகிதம் அம்பத்தூர் எஸ்டேட்டில் அலுவலகத்தை அடுத்து உள்ள டீக்கடைக்குச் சென்று டீ மேஸ்ட்ரோ பழனியிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஐயா நமோ டீக்கடை பற்றி வகுப்பு எடுக்க ஆரம்பித்து விட்டார். ஒரு டீக்கடைக்காரரு இந்த நாட்டின் பிரதமரா வருவார்ன்னா எங்களுக்கெல்லாம் பெருமை சார்ன்னார். ரெம்ப சந்தோசம் அண்ணாச்சின்னு சொல்லிவிட்டு நிக்கயில… பேச்சு அம்மா – வரிசைக்கு வந்துச்சு. அம்மா உணவகத்தில் சப்பாத்தியாமே! அதுவும் 3 ரூபாய்க்கு! அவ்ளோதான்… பழனி அண்ணாச்சி புளகாங்கிதம் அடைஞ்சி… இன்னும் என்னல்லாம் அம்ம சவுகரியம் செஞ்சி கொடுத்தாங்கன்னா… நல்லாருக்கும்னு பட்டியல் போட ஆரமிச்சிட்டாரு.. டீக்குடிக்க வந்த ரெண்டு மூணு பேரு நக்கலா…. டாஸ்மாக்கை எடுத்துட்டு அம்மா பேரை அதுக்கு வைக்கணுமாம்… அம்மா வைன் ஷாப்னு.. காதுல விழாத மாதிரி… நாங்க எங்க பக்கம் திரும்பிக்கிட்டு, உடன் இருந்த சகா வேல்முருகனிடம் பேச்சுக் கொடுத்தேன்.. அவருக்கு ஆம்லெட் சாப்பிடுவதில் பிரியம் அதிகம். சார்… ஒரு ஆம்லெட் 15 ரூவாய்க்கு விக்கிறானுங்க சார்… அம்மா உணவகத்துல ஆம்லெட் 5 ரூவாய்னோ, 7 ரூவாய்னோ வெச்சி வித்தாங்கன்னா… நல்லாருக்கும் சார்ன்னார். இன்னொரு சகா, பாலா… சார் அம்மா வாடகை வீடுகள் திட்டத்தை சென்னை மாநகராட்சியில் தொடங்கணும். சென்னை மாநகராட்சி சார்பாவே, நல்ல இடத்துல நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டி, குறைஞ்ச வாடகைக்கு விட்டு, ஹவுஸ் ஓனர்கள் கொட்டத்தை அடக்கணும் சார்ன்னார்… டீக்கடைக்காரர் பழனி தன் பங்குக்கு ஏதோ கமெண்ட் அடிக்க, கொஞ்சம் நக்கல் கலந்த கோபத்தில் பழனியிடம் சத்தமாகச் சொல்லி வந்தேன்.. அடுத்து அம்மா தொடங்கபோறது அதாங்கேம்.. பாருய்யா பாரு.. ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள்… சென்னை மாநகராட்சி சார்பில…. தெருவுக்கு தெரு, முக்குக்கு முக்கு “அம்மா டீக் கடை” தொடங்கி, 2 ரூவாய்க்கு டீ கொடுத்து, உங்க கொட்டத்தை எல்லாம் அடக்கப்போறாங்க… நீ வேணா பாரு. போன மாசம் 6 ரூபாய்.. இப்போ 7 ரூபாய்னு நீ சொன்னதும் மறுக்காம கொடுத்தோம்ல… இனி பாரு… உங்க நிலையை?! அப்ப பேசுவீங்களா இப்டி? பழனி முகத்தில் ஈயாடவில்லை. ஆனாலும் சிரித்துக் கொண்டே… சார் மக்களுக்கு அவ்வளவு குறைஞ்ச விலையில் கொடுத்தா நல்லதுதானே சார்… நானும் மனமுவந்து வரவேற்கிறேன்னார்…. ஆக…… தமிழக அரசே தமிழக அரசே…. அடுத்து அம்மா பெயரில் ஆரம்பிக்க வேண்டியது…. ஆவின் நிர்வாகத்துடன் கைகோத்து அம்மா டீக்கடையை! அம்மா அம்மா…… எங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories