* சிவபிரதோஷம்*
*”ஆத்ம சிவன்”*
*(மீ.விசுவநாதன்)*
*ஆயிரம் செல்வ மடைந்தாலும்*
* ஆத்ம சிவனை மறவாத*
*சேயென வாழும்* * நிலைவேண்டும் !*
* சிறந்த பணியில் பொழுதெல்லாம்*
*ஓயுத லின்றி திருத்தொண்டில்*
* உள்ளே மகிழு முயிர்வேண்டும்!*
*வாயிலே பூக்கும் மலராக*
* வாசக் கவிதை தரவேண்டும் !*
*மந்திரம் தந்து மதிதிறந்த*
* மாண்பு குருவை நினைக்கின்ற*
*சிந்தனை நன்கு வரவேண்டும் !*
* சேர்ந்த உறவு நலங்காண*
*புந்தியில் வெள்ளைக் குணம்வேண்டும் !*
* பொதிகை முனிவன் புகழ்போல*
*சந்திர சூர்யக் கதிர்களென*
* சாகா வரம்நான் பெறவேண்டும் !*
*(**இன்று* *06.07**.2017 பிரதோஷம்)*



