30-03-2023 12:14 AM
More
    Homeஇலக்கியம்கவிதைகள்பூங்கனல் பழக்கிய சாமரம்!

    To Read in other Indian Languages…

    பூங்கனல் பழக்கிய சாமரம்!

    கவிதை: சந்தக்கவி சந்தர் சுப்ரமணியன்

    bharathi
    bharathi

    செந்தமிழ் நாவதன் தீந்தமிழ்ச் சாரலில்
    திளைக்கின்ற புல்வெளி நான்! – எனில்
    சிறையுறும் சொல்வெளிதான்!
    வந்தெழும் வார்த்தைகள் வையகம் கேட்குமுன்
    வளைக்கிறேன் ஓசையை நான்! – அவன்
    வளர்க்கின்ற மீசையே நான்!

    பாவலன் பாரதி பாவினில் பூங்கனல்
    பழக்கிய சாமரம்நான்! – தமிழ்
    பதுக்கிய தீஞ்சரம்நான்!
    தூவிடும் பூந்தமிழ்த் சொற்களின் தென்றலைத்
    தொகுத்திடும் சாளரம்நான்! – அவன்
    தூய்தமிழ்த் தூறலில்நான்!

    தேனடைச் சூழலில் தோயுமப் போதுமென்
    தேகத்தில் ஏதுகறை? – தமிழ்த்
    தேனெனில் ஏதுநரை?
    கான்எனில் மோதிடும் காவலன் மூச்சினில்
    கருத்தது நான்சரிதான்! – அவன்
    கருத்(து)அது தீப்பொறிதான்!

    ஆணவத் தாற்சிரம் அடைந்த பாகையை
    அடக்கிடச் சுருட்டிவைத்தான்! – எனை
    அடிக்கடி முறுக்கிவைத்தான்!
    மாணவ நாட்களில் மாநகர் காசியில்
    வந்ததிப் பாகையன்றோ! – நான்
    வளர்த்தவன் பாகமன்றோ!

    வீரிய வார்த்தைகள் வேண்டுமப் போதெனை
    விரலினால் மீட்டுகின்றான்! – பின்
    வெண்தாளில் தீட்டுகின்றான்!
    தூரிகை நான்!எனைத் தூண்டியே பன்னிறம்
    தொட்(டு)அவன் பண் அமைப்பான்! – எனைத்
    தொட்டஅன்பன் அவன்தான்!

    வீச்சுடன் வேர்விடும் வெந்தணற் சொற்களின்
    வெம்மையை நான் கணித்தேன் – அதை
    விதையிலே நான் தணித்தேன்!
    மூச்சினில் ஈற்றெது முன்னறிந் திருந்திடின்
    முழுவதும் தடுத்திருப்பேன்! – அவன்
    முடிவினைத் தவிர்த்திருப்பேன்!

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    fourteen − one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...