December 6, 2025, 11:27 AM
26.8 C
Chennai

வாசிக்காமல் புரிந்துகொண்ட வார்த்தை இலாக் கவிதை!

letterone எழுத அமர்ந்தால் வருவதில்லை! எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்! வேறென்ன…? கவிதைதான்! உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம். கடலைச் சென்று சேராத நதியைப் போல் மனதைச் சென்று தொடாத கவியும் வீண்! நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்! மனத்தே பாவையும் குடியிருந்தால் கவிதைதான்! பார்வை சரி… வார்த்தைகள் வேண்டுமே! வார்த்தைகள் மட்டுமே இருந்துவிட்டால் கவிதை வருமா? வார்த்தைகள் இல்லாமலும் கவிதை இருக்கும்! காரணம் அங்கே இருப்பது புரிந்துணர்வு! ஆம்…. ஆம்! கவி எழுதச் சொற்கள் அவசியமா? கருத்தோடு கேட்டு நின்ற கேள்வி பல காலம்! எண்ணக் குதிரை பாய்ந்தோட… எனக்குக் கிடைத்தது ஒரு புத்தகம்! ஏர்வாடி ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகம்! ரசித்துப் படித்தேன்… ரசனைக்குத் தீனி ரகம் ரகமாய்! ரசனை மட்டும் ஒன்றாயிருந்தால் நீங்களும் ரசிக்கலாம்! ஏர்வாடியாரின் அந்தக் கவிதை இதோ..! மொழியின் முன் மண்டியிட்டு வார்த்தை வரம் கேட்டேன் அரசியல் வாதிகள் அள்ளிக் கொண்டு போய்விட்டார்கள் கட்டுரையாளர்கள் சிலர் கேட்டு வாங்கிப் போனார்கள் மீதமிருந்ததை பேசவும் ஏசவும் மனைவியார் வாங்கிக் கொண்டார் தாமதமாக வந்து நிற்கிறாயே தமிழ்க் கவிஞனே என மொழி மிகவும் வருத்தியது. வேறு வழியின்றி வெற்றுக் காகிதத்தை மடித்து வழியில் என் காதலியிடம் தந்தேன். வாங்க மறுத்த அவள்… “வேண்டாம் நீ என்ன எழுதியிருப்பாய் என எனக்குத் தெரியும்” என்றாள். வார்த்தைகளே இல்லாத கவிதையை வாசிக்காமலேயே அவள் புரிந்து கொண்டதும்தான் தெரிந்தது…. “கவிதைக்கு வார்த்தைகள் கட்டாயம் இல்லை!” என்று!

  • ஏர்வாடியாரின் இந்தக் கவிதை ஏனோ எனை வாட்டிவிட்டது! ஆம்! ஒரு செயல்கூட அழகுக் கவிதையை வெளிப்படுத்தும் அதிசயம் இங்கே! உள்ளம் படிக்கப் படுகிறதே! அதுதான் காரணம்!

கவிதை மொழியைக் காது கொடுத்துக் கேட்கலாமே… மூன்று கவிதை நூல்களின் இலக்கிய விமர்சனம்…. ஒலிவடிவில்…! [soundcloud url=”https://api.soundcloud.com/tracks/144044927″ params=”auto_play=true&color=ff5500″ width=”100%” height=”166″ iframe=”true” /]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories