தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

Published:

dinamani wishes - 2026

தமிழினத் துரோகிகள் /
கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் /
முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் /
இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்…
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது…
இப்போதும் அப்படியே இருக்கிறது…
நாளையும் அப்படியே இருக்கும்!
நாம்
நாமாக நம்மை உணரும் வரை!
நாளைய நம் நாம் நம்மை உணர்த்திக் கொண்டிருக்கும் வரை!

dhinasari logo news - 2026

***

பங்குனிக் கதிரோன் நேற்றுப்
பரவிய கடலுள் மூழ்கிச்
சங்கடம் ஒழிந்த தென்று
சாற்றுவான் போல இன்று
மங்கிய இருளைப் போக்க
மலைகளைத் தாண்டி வந்தான்;
தங்கலும் தடையும் இன்றித்
தமிழாண்டு பிறந்த தன்றே!

சித்திரை பிறந்தது தமிழா!
சித்தம் குலைக்கும் உன் தன்
நித்திரை நீக்குவாய் தமிழா!
நித்தம் தமிழ்ப் பணியை
எத்திறமும் ஆற்றவே வாழ்வில்
ஏங்கிக் காத்திரு தமிழா!
இத்திறம் மறவாதே தமிழா!
என்றுமே இன்புறுவாய் தமிழா!

மனமதில் இருளைப் போக்கி
மாசிலா அறிவுச் சுடரை
அனுதினம் பெருக்கி மக்கள்
ஆர்வமும் கவர்ந்தவற்றுள்
“தினமணி” என்னும் எங்கள்
தேன்மொழிச் செய்தித் தாளின்
இனமொன்று தோன்றச் செய்தாள்
ஈடிலாத் தமிழ்தாய் அன்றோ?

ALSO READ:  ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

அன்பெனும் கருணை ஊற்றில்
அமுதெனும் புனல் சொரிந்து
பொன்னிறம் பொலிந்து வீசிப்
பொங்கியே வழிந்து ஓடும்
தன்னிகர் தானே யென்னும்
தனித் தமிழ் பருகி மக்கள்
நன்னிலை எய்த வைத்த
நந்தமிழ் தாயே வாழ்க!

  • நன்றி: தினமணி 
  • கருத்து: செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img