
எங்களை விட சுபஸ்ரீயை கடவுள் அதிகம் நேசித்துவிட்டார்” என்று சென்னையில் பேனர் விழுந்து நிலைதடுமாறி சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ யின் அலுவலக நண்பர்கள் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்
சுபஸ்ரீ எனது அலுவலக நண்பர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்’ என அவரது அலுவலக நண்பர் ஒருவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் சுபஸ்ரீயின் அலுவலக இருக்கை மற்றும் கணினியின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


