டிஜிட்டல் மயம் சிக்கலில் ரேஷன் கடை ஊழியர்கள்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

 

குடிமைப் பொருள்கள் விநியோகத்தில், டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவதால் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு ஏழை மக்களின் வறுமையை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மலிவு விலையில் பாமாயில், சர்க்கரை, உளுந்து, துவரம்பருப்பு, உப்பு, கோதுமை போன்றவற்றை வழங்கி வருகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் அதைத் தடுக்கும் வகையில் தற்போது கணினி முறை விற்பனை செயலி இயந்திரம் (பாயிண்ட் ஆஃப் சேல்) கருவியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும்போது, இந்த கருவியில் பதிவு செய்யப்படுகிறது.

வாங்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக செல்லும்.
மேலும், ரேஷன் கடைகளுக்கு வரும் சரக்குகளை பதிவு செய்தல், தினசரி விற்பனை விவரம், இருப்பு விவரம் ஆகியவற்றை உடனடியாக இந்த கருவியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், சர்க்கரை மூட்டைகளில், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைகிறது.
தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன.
இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதற்கான பணத்தை தங்களது கை இருப்பைக் கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் எனவும், ஒரு கடைக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இதுபோன்று செலவாகி வருவதாகவும் ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெண் ஊழியர்கள் பணிபுரியும் கடைகளில் மூட்டைகளை தூக்கி இறக்குவது போன்ற சில கடினமான பணிகளுக்கு தனி நபரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 2 ஆயிரம் வரை வழங்கி வருகின்றனர்.
தற்போது ரேஷன் ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இதில் மேற்கண்ட செலவுகளை ஈடுகட்டினால் வெறும் கையுடன் தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ரேஷன் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிமைப்பொருள் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்கிய அதிகாரிகள், இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, அதனை களைய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

* தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன. இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

Related articles

Recent articles

spot_img