February 22, 2026, 8:50 AM
26.1 C
Chennai

டிஜிட்டல் மயம் சிக்கலில் ரேஷன் கடை ஊழியர்கள்

 

குடிமைப் பொருள்கள் விநியோகத்தில், டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவதால் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு ஏழை மக்களின் வறுமையை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மலிவு விலையில் பாமாயில், சர்க்கரை, உளுந்து, துவரம்பருப்பு, உப்பு, கோதுமை போன்றவற்றை வழங்கி வருகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் அதைத் தடுக்கும் வகையில் தற்போது கணினி முறை விற்பனை செயலி இயந்திரம் (பாயிண்ட் ஆஃப் சேல்) கருவியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும்போது, இந்த கருவியில் பதிவு செய்யப்படுகிறது.

வாங்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக செல்லும்.
மேலும், ரேஷன் கடைகளுக்கு வரும் சரக்குகளை பதிவு செய்தல், தினசரி விற்பனை விவரம், இருப்பு விவரம் ஆகியவற்றை உடனடியாக இந்த கருவியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், சர்க்கரை மூட்டைகளில், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைகிறது.
தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன.
இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதற்கான பணத்தை தங்களது கை இருப்பைக் கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் எனவும், ஒரு கடைக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இதுபோன்று செலவாகி வருவதாகவும் ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெண் ஊழியர்கள் பணிபுரியும் கடைகளில் மூட்டைகளை தூக்கி இறக்குவது போன்ற சில கடினமான பணிகளுக்கு தனி நபரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 2 ஆயிரம் வரை வழங்கி வருகின்றனர்.
தற்போது ரேஷன் ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இதில் மேற்கண்ட செலவுகளை ஈடுகட்டினால் வெறும் கையுடன் தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ரேஷன் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிமைப்பொருள் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்கிய அதிகாரிகள், இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, அதனை களைய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன. இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories