ஓடத் தடை போடாமல் கவனமுடன் குழந்தைகளை ஓடச் சொல்லுங்கள்: தன்னம்பிக்கை பயிலரங்கில் அறிவுரை

01-04-15 Karur Melai news photo 01 கரூர்: கரூரில் கோவை ரோட்டில் அமைந்து உள்ள அவுரா இண்டர்நேஷ்னல் என்னும் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டிற்கு இரு முறை அங்கு பணியாற்றும் பாணியாளர்களுக்கான சுயமுன்னேற்ற பயிலரங்கு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் பயிலரங்கில் சுய முன்னேற்ற பயிற்சியாளர் கோ-பாஸ்ட் கோபிநாத் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது எந்த ஒரு செயலையும் ஆற்றல், ஆக்கம், பிடிப்போடு செய்யவேண்டும், செயல்பாட்டில் ஆசை இருக்கவேண்டும். சோம்பலை தவிர்த்து உழைப்பை கூட்ட வேண்டும். பொறாமையை நீக்கி கருணையோடு, செயல்படவேண்டும். அகந்தையை அகற்றி அடக்கத்தோடு திறமையை வெளிப்படுத்த வேண்டும். சுவாமி விவேகானந்தர் சரியான திட்டமிடுதலின்றி அமெரிக்கா பயணத்தின் போது அங்கே சில நாட்கள் தங்க வேண்டிய நிலை வந்தது. அந்தநாட்களில் தான் அறிந்த இராமாயண போன்ற ஆன்மீக கதைகளை நாள்தோறும் சொல்ல அங்கு கூடிய மக்கள் ஆர்வத்தோடு கேட்டனர். தனியாளாக அமெரிக்கா சென்ற விவேகானந்தர் இந்தியா திரும்பிய போது 5 ஆயிரம் சீடர்களை கொண்டவராக உயர்ந்தார். இதற்கு அடிப்படை அவருடைய திறமையாகும். சவுதி அரேபியாவில் 185 மாடிகள் கொண்ட கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள் என்றால் அந்த தொழிலில் அவர்கள் காட்டிய ஈடுபாடும் பிடிப்பும் தான் காரணம். நாம் நம்முடைய குழந்தைகளை அது ஒடுகிற போது ஒடாதே விழுந்து விடுவாய் என தடுக்கிறோம். அப்புறம் எப்படி ஒலிம்பிக்கில் நம்முடைய குழந்தைகளை வெற்றி பெற செய்யமுடியும். குழந்தையை ஓடு, அதே நேரத்தில் கவனமாக ஓடு என்று எச்சரித்து ஓடச் செய்யவேண்டும். சுவரில் அடிக்கிற ஒரு ஆணியே தன்னுடைய அடையாளத்தை விட்டு விட்டு போகிறது. மனிதர்களாகிய நாம் வாழ்வதில் அடையாளம் அமையும் படி வாழ வேண்டும், வழக்கறிஞர்களின் ஒருவரிடம் சென்றால் 5 லட்சம் ரூபாய் வங்கியில் பணம் கட்டி சலான் கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்றார். அதே சட்டம் படித்த இன்னொரு வழக்கறிஞர் ரூ 50 கொடுத்து அபிடவிட்டில் கையெழுத்து போட காத்துக் கிடக்கிறார். இந்த இரு வழக்கறிஞர்களுக்கும் உள்ள வித்தியாசம் கற்ற கல்வியில் அவர்கள் கொண்ட ஈடுபாடும், திறமையும்தான். ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் 6 மாதம் கழித்து தான் என்னால் சிகிச்சை தர முடியும் என்கிறார். இன்னொரு மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு ஆள் வராதா என காத்துக் கிடக்கிறார். இருவருக்கும் இந்த வேறுபாட்டிற்கு காரணம் பயன்படுத்துகிற திறமையே. தொலை நோக்கோடு செயல்படுகிற நிறுவனமும், தான் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்கிற தொழிலாளிகள் தங்களுடைய திறமைகள் வளர்த்துக் கொண்டு ஈடுபாட்டோடு பணி செய்தால் தங்கள் நிறுவனத்தையும் வளர்த்து தாங்களும் வாழ்க்கையில் உயரலாம் என்பதை பல்வேறு வரலாற்று படக் காட்சிகளுடன் விளக்கி பயிலரங்கத்தை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் எல்.ஐ.சி நடராஜன், கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழநியப்பன், திருச்சி கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அவுரா இண்டர்நேஷ்னல் நிறுவனர் அவுராபழ.ஈஸ்வரமூர்த்தி வரவேற்று நன்றி கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்திலேயே வருடத்திற்கு இரு முறை தொழிலாளர்களுக்காக பயிலரங்கம் நடத்திவரும் அவுரா ஈஸ்வரமூர்த்தியின் பெற்றோர்களை கரூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் கொளரவித்தார். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி கொடுத்த கோ-பாஸ்ட் கோபிநாத்தையும் அவுரா பழ.ஈஸ்வரமூர்த்தி கௌரவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories