காவல் நிலையம் அருகிலேயே கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி: 5 பேர் சுற்றிவளைப்பு

ஸ்ரீவைகுண்டம்: காவல் நிலையம் அருகிலேயே வெட்டிக் கொல்லப்பட்ட ஸ்ரீவைகுண்டம் விவசாயி கொலை தொடர்பாக 5 பேரை போலீஸார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவ்வலடியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகராஜா (45) ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அரசு நெல் கொள்முதல் குடோனுக்குச் சென்றார். பின்னர் குடோனில் இருந்து வெளியே வந்தபோது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று திடீரென ஆறுமுகராஜாவை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவருக்கு கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ஆறுமுகராஜா அந்த கும்பலிடம் இருந்து தப்பி, போலீஸ் நிலையத்தை நோக்கி ஓடினார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய அவரை போலீசார் மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஆறுமுகராஜா உயிரிழந்தார். போலீஸ் நிலையம் அருகிலேயே விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்… கொலை செய்யப்பட்ட ஆறுமுகராஜா டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். மனைவியை விவாகரத்து செய்தவர். ஆறுமுக ராஜாவுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஆறுமுகராஜாவின் வாழைத்தோப்புக்குள் புகுந்த எதிர்த் தரப்பினர் அங்கிருந்த வாழைகளை வெட்டி சாய்த்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்யவும் முயற்சி செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளூர் மற்றும் மங்கலக்குறிச்சியை சேர்ந்த 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை வாபஸ் பெறுமாறு 7பேரும் ஆறுமுகராஜாவை மிரட்டி வந்துள்ளனர். இந்நிலையில், ஆறுமுகராஜாவின் தாய் ருக்மிணி, தனது மகன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிட்டது. மேலும் ஆறுமுகராஜா வழக்கை வாபஸ் பெறவும் மறுத்துவிட்டார். இதன் காரணமாக எதிர் தரப்பினர் ஆறுமுகராஜாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையில் வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இக்கொலை தொடர்பாக 5 பேர் போலீசில் சிக்கியுள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories