திருச்சி: நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது. இது குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கூறியபோது… காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசின் பட்ஜெட்டில் முதல் கட்டமாக ரூ.25 கோடி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் நகல் எரிப்புப் போராட்டம் நாளை திருவாரூர், நாகை, தஞ்சை, திருச்சி, சிதம்பரம் ஆகிய 5 இடங்களில் நடைபெறுகிறது. நான் திருவாரூரில் நடைபெறும் பேராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதன்படி உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தினை உடனடியாக அமைக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறாமல் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியிருப்பது மத்திய அரசுக்குரிய அதிகார வரம்பில் ஒரு மாநில அரசு தலையிடும் செயலாகும். எனவே இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 355 ன் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அணைகட்ட ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில், தமிழக எம்.பிக்கள் குழு பிரதமரை சந்தித்து முறையிட்டது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு சட்டவிதி 355 ஐ பயன்படுத்துவதற்கு தமிழக எம்.பிக்கள் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து வலியுறுத்த வேண்டும். அதன் பின்னரும் மத்திய அரசு கர்நாடகம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக எம்.பிக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
Less than 1 min.Read
நாளை 5 இடங்களில் கர்நாடக பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டம்
Hot this week
தலையங்கம்
ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
உரத்த சிந்தனை
சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

Topics
தலையங்கம்
ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
சினி நியூஸ்
ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.
சினி நியூஸ்
ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
உரத்த சிந்தனை
சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
நூலரங்கம்
‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு
சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்
நிகழ்ச்சிகள்
இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
Entertainment News
Previous article
Next article

