சென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர், குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த குமரன் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் ரூ. 50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, குமரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி வந்து, தன் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றுள்ளார். பூச்சி மருந்து குடித்து காப்பாற்றப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, அந்த முடிவைக் கைவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த எண்ணத்துடன் நேற்று மாலை 4.30க்கு அங்குள்ள ரயில்வே இருப்புப்பாதையில் தனது குடும்பத்தினருடன் ரயில் முன் பாய குமரன் காத்துக் கிடந்து, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன் திடீரென தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ் (6) ஆகியோருடன் பாய்ந்துள்ளார். இதில் கணேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக பலத்த உயிர் தப்பியுள்ளார். மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Less than 1 min.Read
கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
வணிகம்
போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!
மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.
சற்றுமுன்
சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...
உலகம்
இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!
இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்தியா
பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!
பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
வணிகம்
போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!
மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.
சற்றுமுன்
சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..
சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...
உலகம்
இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!
இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இந்தியா
பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!
பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கல்வி
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!
இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.
உரத்த சிந்தனை
பிஜேபி., உள்ள வந்துடும்!
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
உரத்த சிந்தனை
மெட்ரோ அரசியல்!
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
Entertainment News
Previous article

