தீ விபத்தில் இடிந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று இடிப்பு? ரூ.300 கோடி சேதம்!

chennai silks building collapsed - 2026

சென்னை:

தீவிபத்தில் இடிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று முழுமையாக இடிக்கும் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தீவிபத்தில் சுமார் ரூ.300 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, துயரமான இந்தச் சூழலிலும், தி.நகர் கிளையில் வேலை பார்த்து வந்த ஊழியர்களுக்கு மாதச் சம்பளத்தை சென்னை சில்க்ஸ் நிர்வாகம் பட்டுவாடா செய்துவிட்டதாகவும், அவர்களை சென்னையில் உள்ள மற்ற கிளைக் கடைகளுக்கு பணிகளைப் பிரித்து வழங்கி அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடிகளைக் கொண்ட சென்னை சில்க்ஸ் கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்களில் இருந்து 35 தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டன. 250-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்க போராடி சுமார் 30 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், கட்டடத்தின் முன்பகுதி முழுமையாக இடிந்து விழுந்தது. நேற்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்த இரும்பு கூரைகள் சரிந்தன. அந்நேரம் கட்டடத்தில் விரிசல் அதிகமானது. அடுத்த 2 நிமிடங்களில் கட்டடத்தின் உள்பகுதி பயங்கர சத்தத்துடன் சரியத் தொடங்கியது. மேல் தளத்தில் இருந்து 3-வது தளம் வரை இடிந்து விழுந்ததால் அந்தப் பகுதி முழுவதும் தூசியுடன் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. இதனால் கட்டடத்தை முழுமையாக இடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பணி இன்று துவங்கி ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற இருப்பதால், பாதுகாப்பு பணிக்காக அந்த பகுதியில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தீ விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து மாற்றம் இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கர தீ விபத்தில் கடையில் இருந்து துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமாயின. சேத மதிப்பு ரூ.300 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories