சென்னை: சுமார் நான்கரை வருடங்கள் தன்னுடன் நெருக்கமாக வாழ்ந்துவிட்டு, தன்னிடம் இருந்து ரூ.20 கோடி பணம் பறித்துவிட்டு, தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன்னை மிரட்டுவதாகக் கூறி புகார் கொடுத்துள்ளார் கோவையைச் சேர்ந்த பெண். கோவையைச் சேர்ந்தவர் கவிதா (34). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். முன்னதாக இரு முறை கொடுத்த புகாரில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கு முன்னர், கோவை ஆணையர் அலுவலகத்திலும் பல முறை புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுக்களில், திருமாவளவன் தன்னுடன் பழகிவிட்டு, திருமணம் செய்ய மறுப்பதாக கவிதா கூறி இருந்தார். இந்நிலையில் இன்று மூன்றாவது முறையாக சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் திருமாவளவன் மீது கவிதா புகார் கொடுத்துள்ளார். அதில், திருமாவளவனும் அவரது ஆதரவாளர்களும் தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த கவிதா, இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, திருமாவளவன் கடந்த 4½ ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் பழகத் தொடங்கினார். அவருடன் பழகிய பிறகு என் முதல் கணவரை பிரிந்து விட்டேன். தற்போது ஒரு சிறுவனை தத்து எடுத்து வளர்த்து வருகிறேன். என்னுடன் நெருங்கிப் பழகிய திருமாவளவன் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். ‘உன்னைத் திருமணம் செய்தால் என்னால் அரசியல் நடத்த முடியாது’ என்கிறார். ரூ. 20 கோடி மதிப்புள்ள சொத்துக்களை என்னிடம் இருந்து திருமாவளவனும் அவரது ஆட்களும் பறித்து விட்டனர். என்னிடம் உள்ள கோடிக்கணக்கான மற்ற சொத்துக்களையும் பறிக்க முயற்சி செய்கிறார்கள். என்னிடம் பணியாற்றிய லதா என்ற பெண்ணை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நான் எங்கே சென்றாலும் அந்தப் பெண் என்னை பின் தொடர்ந்து வருகிறார். முழுக்க முழுக்க திருமாவளவனின் ஆட்கள் கட்டுப்பாட்டில் நான் இருந்து வருகிறேன். என்னிடம் பழகி ஏமாற்றியது பற்றி இதுவரை கோவை போலீசில் 10 முறை புகார் செய்துள்ளேன். ஆனால் எனக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை. எனவே அசோக் நகரில் உள்ள திருமாவளவனின் அலுவகத்தில் இன்று முதல் தர்ணா போராட்டம் தொடங்க உள்ளேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன் – என்று கூறிவிட்டு கவிதா தன் காரில் ஏறிச் சென்றார். கவிதா டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வந்ததை அறிந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அங்கே திரண்டனர். அதனால் அங்கே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
4½ வருடம் வாழ்ந்து ரூ.20 கோடி பறித்த திருமாவளவன்: மிரட்டுவதாக பெண் புகார்
Popular Categories


