ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை

blue whale death madurai - 2026

மதுரை:

உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள ப்ளூவேல் கேம் ஆன்லைன் விளையாட்டுக்கு மதுரையைச் சேர்ந்த இரண்டாம் வருட கல்லூரி மாணவர் ஒருவரும் பலியாகியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையைச் சேர்ந்த ஜெயமணி என்பவரின் இரண்டாவது மகன் விக்னேஷ் (வயது 19). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கிக் கொடுத்தனர். அதில் தடை செய்யப்பட்ட ‘புளூ வேல்’ எனப்படும் நீல திமிங்கலம் விளையாட்டை விக்னேஷ் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது மாணவர் விக்னேஷ் தனது வலது கையில் திமிங்கலத்தின் படத்தை வரைந்திருந்தது தெரியவந்தது. அவர் தனது நோட்டு புத்தகங்களிலும் திமிங்கலத்தின் படத்தை வரைந்து வைத்திருந்ததும் தெரியவந்தது. நீல திமிங்கலம் விளையாட்டல்ல. விபரீதம். உள்ளே சென்றால், வெளியே வர முடியாது என்றும் எழுதி வைத்திருந்தார் விக்னேஷ்.

எனவே, அவர் ப்ளூவேல் விளையாட்டை விளையாடியதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories