ஐம்பொன் சிலைகள் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!

Screenshot_2020_0820_122917

மதுரையில் கோவிலில் புகுந்து 3 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலானது, 300 ஆண்டுகள் பழமையானது.

இந்த கோவில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக இந்த கோவில் பூட்டப்பட்டு இருந்தது. பூசாரிகள் மட்டும் காலை, மாலையில் பூஜைகள் செய்தனர்.

இந்தநிலையில் காலையில் பூசாரி மோகன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் உண்டியலை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும், கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் திலகர்திடல் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது பேச்சியம்மன் சன்னதிக்கு பின்னால் அய்யனார் மண்டப கதவு உடைக்கப்பட்டதையும் அறிந்தனர்.
அங்குள்ள மரப்பெட்டியில் இருந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை, குதிரையுடன் அய்யனார் சிலை, பொன்னர்சங்கர் சிலை என 3 ஐம்பொன் சிலைகள், குத்துவிளக்கு உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.

இது தவிர அந்த பெட்டியில் இருந்த உற்சவர் பேச்சியம்மன் உள்ளிட்ட 3 சிலைகள் அப்படியே இருந்தன. மேலும் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விசாரணையில், இரவில் கோவிலின் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து ஒரு இளைஞர் உள்ளே வந்துள்ளார். அவர் சிலை வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் கதவை உடைத்தார்.

பின்னர் அங்கிருந்த சிலைகளை கொள்ளையடித்துவிட்டு வெளியே உள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததை பார்த்து அதை உடைத்து, மின்சாரத்தை துண்டித்துள்ளார்.

அதன்பின்னர் இரவில் 11.30 மணி அளவில் அதே போன்று சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது யானை ஐம்பொன் சிலையை கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே அதனை அந்த பகுதியில் மறைத்து வைத்துச் சென்றது, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அதன் அடிப்படையில்தான் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, கொள்ளையனை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி செந்தில்வேல் (வயது 57) கூறுகையில், “பழமையான இந்த கோவிலில் கல் சிலைகள், ஐம்பொன்சிலைகள் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி களரி பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. அந்த திருவிழாவின் போதுதான் உற்சவர் ஐம்பொன் சிலைகளுக்கான வீதி உலா நடைபெறும்.

கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும். யானை சிலை கனமானது என்பதால், அதனை கோவிலில் பின்புறம் உள்ள ஒரு மறைவான பகுதியில் இருந்ததை மீட்டுள்ளோம்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Topics

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories