ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை ஒரு மணி நேரத்தில் மீட்டளித்த போலீசார்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தனது மனைவி கஸ்தூரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய தனது மகள் ஜெயலெட்சுமி மற்றும் மருமகள் சங்கரி ஆகியோருடன் வீட்டிலிருந்து ஆட்டோவில் ஏறி மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு இன்று காலை
சென்றனர்.

இதனிடையே அவர்கள் கொண்டுவந்த பணமுள்ள பேக்கை ஆட்டோவில் தவறவிட்டது தெரியவந்தது. சங்கரி என்பவர் மருத்துவமனை வாசலுக்கு வந்து மருத்துவமனை காவலாளியிடம் விசாரித்து அருகில் உள்ள மேலூர் சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு பணியில் இருந்த முதல் நிலை காவலர் ஜான்பாலிடம் தகவலை கூற, அவர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், புதூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.

காவல் துறையினர் உடனடியாக காவல் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி, நகர் முழுவதும் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை உஷார் படுத்தினார்.

மருத்துவமனைக்கு வந்து கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து அதில் பதிவான வாசகம் மற்றும் வாகன பதிவு எண்ணை வைத்து புதூர் பகுதி ஆட்டோ சங்க செயலாளரிடம் காவல்துறையினர் விசாரித்ததில் அந்த ஆட்டோ புதூர் பகுதியை சேர்ந்த அன்வருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

அதன்பின் அன்வரிடம் விசாரிக்க அவர் வைத்துள்ள 5 ஆட்டோக்களில் இதுவும் ஒன்று என்பதும் ஆட்டோவின் டிரைவர் வைரமுத்து என்பதும் தெரியவந்தது.

உடனடியாக ஆட்டோ ஓட்டுனரை தொடர்பு கொண்டு பேசியதில் அவர் ஆட்டோவில் பேக் இருப்பதையும், இதுவரை பேக் இருப்பதை கவனிக்காமல் இருந்ததையும் தெரிவித்தார்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனரை மேலூர் சோதனைச் சாவடிக்கு வரச் சொல்லி பேக் சங்கரி என்பவரிடம் புதூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாண்டியன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

சங்கரி, பேக்கை சோதனை செய்து பார்த்ததில் பணம் ரூ.69,100 சரியாக உள்ளது என்பதை தெரிவித்தார். சம்பவம் நடந்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் பேக்கை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல் அதிகாரிகளை மதுரை மாநகர் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories