ஜெயலலிதா மறைந்த பிறகும் திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே!

ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட, திமுக., மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லையே என்று  பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறி, ரஜினி கூறிய கருத்துக்கு ஆமோதித்துள்ளார் ஹெச்.ராஜா.

கடந்த காலங்களில் திமுக., வெற்றி பெற்ற  தேர்தல்களைப் பார்த்தால், மக்களுக்கு திமுக., மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை என்பதையே காட்டுகிறது. அண்ணா மறைவுக்குப் பின் வந்த அரசும், அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., காலத்துக்குப் பின் 1989ல் வந்த அரசும், வெற்றிடம் இருந்ததால் தான் திமுக.,வுக்கு சாத்தியமானது. ஆனால், பின்னர் 1996, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், ஜெயலலிதாவின் ஜோடி செருப்புகளையும், அணிந்திருந்த பட்டுப் புடைவை நகைகளை அடிக்கடி கட்சி டிவி.,யான சன் டிவி.யில் காட்டி, ஆளும் முதல்வர் மீது தனிப்பட்ட வெறுப்பை வளரச் செய்து அதன்படியே ஆட்சிக்கு வந்தது.

ஆனால் அவ்வாறு வந்தபின்னரும், மத்திய அரசில் இணைந்து, குடும்பத்தினருக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொண்டது. மிகச் சிறந்த தொண்டர்களைக் கொண்ட, கட்டுக் கோப்பான கட்சி என்றெல்லாம் பெயரெடுத்தும், வாக்குச் சாவடிகளில் மல்லுக்கு நிற்பவர்கள், அரசு ஊழியர், ஆசிரியர் இனத்தை கைக்குள் வைத்திருப்பவர்கள் என்றெல்லாம் இருந்தும் கூட, திமுக.,வால் ஜெயலலிதா என்ற பெண்மணியுடன் மோத இயலவில்லை. 2011, 2016 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியது.

இத்தகைய பின்னணியில் ரஜினியின் கருத்து குறித்து பதிவு செய்துள்ள ஹெச்.ராஜா, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை என்று கூறியுள்ளார். அவரது ட்விட்டர் பதிவு..

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories