திருநெல்வேலி அடுத்த ஆலங்குளம் அருகே அரசு பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வண்டிகளின் டிரைவர் உள்பட 4 பேர் பலியாயினர். தென்காசி பஸ்நிலையத்தில் இருந்து அரசு விரைவுப்பேருந்து நேற்று மாலை திருநெல்வேலி புறப்பட்டு சென்றது. ஆலங்குளம் அடுத்த மாறாந்தை கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பஸ்சில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் பொன் சண்முக குமார் (42), லாரி டிரைவர் மகேஷ் (35), தென்காசி அரசுப்பள்ளி ஆசிரியை புனிதா (42). மற்றும் 65 வயது மூதாட்டி வள்ளி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு இடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ரோட்டில் சென்ற அரசு பஸ்சில் டீசல் டேங்க் திடீரென தீப்பிடித்தது. இதை அறிந்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.. ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததனர். இதில் தேவகி (40) என்ற பயணிக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே நேற்று மாலை அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு வேறு விபத்துகள் குறித்து சீதபற்றநல்லூர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
ஆலங்குளம் அருகே அரசு பஸ் லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி: 40 பேர் காயம்
Popular Categories


