ஆலங்குளம் அருகே அரசு பஸ் லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி: 40 பேர் காயம்

ஆலங்குளம் அருகே அரசு பஸ் லாரி மோதல் டிரைவர்கள் உள்பட 4 பேர் பலி: 40 பேர் காயம்   திருநெல்வேலி அடுத்த ஆலங்குளம் அருகே அரசு பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வண்டிகளின் டிரைவர் உள்பட 4 பேர் பலியாயினர். தென்காசி பஸ்நிலையத்தில் இருந்து அரசு விரைவுப்பேருந்து நேற்று மாலை திருநெல்வேலி புறப்பட்டு சென்றது. ஆலங்குளம் அடுத்த மாறாந்தை கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் பஸ்சில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் பஸ் டிரைவர் பொன் சண்முக குமார் (42), லாரி டிரைவர் மகேஷ் (35), தென்காசி அரசுப்பள்ளி ஆசிரியை புனிதா (42). மற்றும் 65 வயது மூதாட்டி வள்ளி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இந்த சோக சம்பவத்திற்கு இடையே விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ரோட்டில் சென்ற அரசு பஸ்சில் டீசல் டேங்க் திடீரென தீப்பிடித்தது. இதை அறிந்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.. ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததனர். இதில் தேவகி (40) என்ற பயணிக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே நேற்று மாலை அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி தென்காசி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரு வேறு விபத்துகள் குறித்து சீதபற்றநல்லூர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories