எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க நீதிபதி ராமதிலகம் காவல்துறைக்கு அறிவுரை!

sveshekhar - 2026

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம்,  சட்டத்தை அனைவருக்கும் பொதுவான முறையில் அமல்படுத்த வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என்று காவல்துறைக்கு  அறிவுரை வழங்கினார்.

ஊடகத் துறையில் பெண்களின் பணி பாதுகாப்பு, செயல்பாடுகளை அவமதிப்பது போல் தோன்றினாலும், ஆண் செய்தியாளர்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் எழுதிய பேஸ்புக் கருத்தை தனது முகநூலில் பகிர்ந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். பின்னர் அவர் அதனை நீக்கிவிட்டாலும், அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த பேஸ்புக் கருத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏப்.20 இல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து சென்னை மாநகரக் காவல் துறை, எஸ்.வி.சேகர் மீது இந்தியக் குற்றப் பிரிவுகள் 504, 505 ( 1 ) (C), 509, பெண்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் 2002 (4) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகி, கைதாகாமல் இருக்க தலைமறைவாக இருக்கிறார் எஸ்.வி.சேகர். அவரது முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, பத்திரிக்கையாளர்கள் அமைப்பு மற்றும் தனிநபர்கள் சார்பில் முன் ஜாமீன் மனு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து மனு வழங்கப்பட்டது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

தொடர்ந்து இன்று முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு பத்திரிக்கை யாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.வி.சேகர் தேசியக் கட்சியில் இருப்பதால் அவர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்காமல் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து, நீதிபதி எஸ்.வி.சேகரைக் கைது செய்து விசாரிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும்,  எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories