எஸ்.வி.சேகரை கைது செய்து விசாரிக்க நீதிபதி ராமதிலகம் காவல்துறைக்கு அறிவுரை!

sveshekhar - 2026

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.வி.சேகரின் முன்ஜாமின் மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமதிலகம்,  சட்டத்தை அனைவருக்கும் பொதுவான முறையில் அமல்படுத்த வேண்டும், பாரபட்சம் காட்டக்கூடாது என்று காவல்துறைக்கு  அறிவுரை வழங்கினார்.

ஊடகத் துறையில் பெண்களின் பணி பாதுகாப்பு, செயல்பாடுகளை அவமதிப்பது போல் தோன்றினாலும், ஆண் செய்தியாளர்களையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் எழுதிய பேஸ்புக் கருத்தை தனது முகநூலில் பகிர்ந்தார் நடிகர் எஸ்.வி.சேகர். பின்னர் அவர் அதனை நீக்கிவிட்டாலும், அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் எஸ்.வி.சேகரை போலீஸார் கைது செய்து விசாரிக்கலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ராமதிலகம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த பேஸ்புக் கருத்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏப்.20 இல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.

இதையடுத்து சென்னை மாநகரக் காவல் துறை, எஸ்.வி.சேகர் மீது இந்தியக் குற்றப் பிரிவுகள் 504, 505 ( 1 ) (C), 509, பெண்கள் வன் கொடுமைத் தடுப்புச் சட்டம் 2002 (4) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகி, கைதாகாமல் இருக்க தலைமறைவாக இருக்கிறார் எஸ்.வி.சேகர். அவரது முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, பத்திரிக்கையாளர்கள் அமைப்பு மற்றும் தனிநபர்கள் சார்பில் முன் ஜாமீன் மனு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து மனு வழங்கப்பட்டது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

தொடர்ந்து இன்று முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வழக்கு குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தார். தமிழ்நாடு பத்திரிக்கை யாளர்கள் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எஸ்.வி.சேகர் தேசியக் கட்சியில் இருப்பதால் அவர் மீது புகார் அளித்த பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அவருக்கு ஜாமீன் வழங்காமல் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து, நீதிபதி எஸ்.வி.சேகரைக் கைது செய்து விசாரிக்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும்,  எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால் எஸ்.வி.சேகரை காவல்துறை கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories