ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே பெஸ்ட்: எவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் சிறப்பா செயல்படுறார்..!?

Published:

Dindigul seenivasan - 2026

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே சிறப்பாக செயல்படுகிறார், எவ்வளவு கடுமையான சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறார் என்று பெருமிதம் பொங்க குறிப்பிட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை விழா துவக்க நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர்,

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எல்லோரும் எளிதில் அணுகும் முதல்வராக உள்ளார். அமைச்சராக இருந்ததை விட முதல்வரான பிறகு அவர் மிக எளிமையாக இருக்கிறார்.

தமிழகத்தில் பலர் முதல்வர் கனவுடன் சுற்றுகின்றனர். முதல்வர் பொறுப்பு என்பது மிகக் கடுமையானது. இக்கட்டான சூழலிலும் அவர் சிறப்பாகச் செயல்படுகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர், தரக் குறைவாக தகுதியில்லாமல் பேசி வருகிறார். மத்திய அரசுக்கு ஜால்ரா போடுவதாக எதிர்க்கட்சிகள் உள்பட எல்லாக் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. இருந்த போதிலும், முதல்வர் நல்ல விஷயங்களை மக்களுக்குச் செய்து வருகிறார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

ஹஜ் பயணிகளுக்கு சலுகை ரத்து, முத்தலாக் பிரச்னை என இதர பிரச்னைகளிலும் இஸ்லாமிய மக்களின் நன்மைக்காக நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் குரல் கொடுத்தனர். இதை யாரும் மறந்துவிடக் கூடாது.

மறைந்த முதல்வரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்று பேசினார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img