தூத்துக்குடி வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, வரும் மே 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடியில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,செயல்படாத அதிமுக அரசை உடனே பதவி விலகக் கோரியும் 25.5.2018 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிலாக, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெறும் தொடர் துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும்,செயல்படாத அதிமுக அரசை உடனே பதவி விலகக் கோரியும் 25.5.2018 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை பதிலாக, மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்
— M.K.Stalin (@mkstalin) May 23, 2018


