அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

la ganesan garlanding azhagumuthukon - 2026

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக., சார்பில் அங்கங்கே உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன், இது குறித்துக் கூறியபோது, “அடிமை வாழ்வை எதிர்த்த, கப்பம் கட்ட மறுத்த முதல் தமிழக மன்னன், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரில் அந்நிய சூழ்ச்சிக்குப் பலியான இளம் மாவீரன், வீர அழகுமுத்து கோன் அவர்களது 260 ஆவது பலி தான நாளான இன்று (ஜூலை 11) காலை எழும்பூரிலுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.

பிறந்த நாள் அளவுக்கு நினைவு நாள் கொண்டாடப் படுவதில்லை. இன்றைய தினம் நினைவு நாள் அல்ல, பலிதான நாள். தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போது உயிரையும் தருவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதற்கு உதாரணம் வீர அழகுமுத்து கோன் அவர்களது பலிதானம்.” என்று கூறினார்.

la ganesan - 2026

அவருடன் நடிகர் எஸ்.வி.சேகர், டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளான தமிழக பாஜக., நிர்வாகிகள் சென்று மாலை அணிவித்தனர்.

அதுபோல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கே சென்று வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். “வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு இன்று (11/7/2018) கட்டாளகுளத்திற்கு சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் தலைசிறந்தவரான வீரன் அழகுமுத்துக்கோனுக்கு பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை. இந்நாளில் வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை மனதில் ஏந்தி வீரவணக்கம் செலுத்துவோம். என்று குறிப்பிட்டிருந்தார்.

azhagumuthukon ponnar - 2026

அதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

azhagumuthukon - 2026

அசம்பாவிதங்களைத் தவிர்க்க இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories