அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

la ganesan garlanding azhagumuthukon - 2026

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜக., சார்பில் அங்கங்கே உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன், இது குறித்துக் கூறியபோது, “அடிமை வாழ்வை எதிர்த்த, கப்பம் கட்ட மறுத்த முதல் தமிழக மன்னன், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரில் அந்நிய சூழ்ச்சிக்குப் பலியான இளம் மாவீரன், வீர அழகுமுத்து கோன் அவர்களது 260 ஆவது பலி தான நாளான இன்று (ஜூலை 11) காலை எழும்பூரிலுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.

பிறந்த நாள் அளவுக்கு நினைவு நாள் கொண்டாடப் படுவதில்லை. இன்றைய தினம் நினைவு நாள் அல்ல, பலிதான நாள். தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போது உயிரையும் தருவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதற்கு உதாரணம் வீர அழகுமுத்து கோன் அவர்களது பலிதானம்.” என்று கூறினார்.

la ganesan - 2026

அவருடன் நடிகர் எஸ்.வி.சேகர், டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளான தமிழக பாஜக., நிர்வாகிகள் சென்று மாலை அணிவித்தனர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

அதுபோல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கே சென்று வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். “வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு இன்று (11/7/2018) கட்டாளகுளத்திற்கு சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் தலைசிறந்தவரான வீரன் அழகுமுத்துக்கோனுக்கு பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை. இந்நாளில் வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை மனதில் ஏந்தி வீரவணக்கம் செலுத்துவோம். என்று குறிப்பிட்டிருந்தார்.

azhagumuthukon ponnar - 2026

அதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

azhagumuthukon - 2026

அசம்பாவிதங்களைத் தவிர்க்க இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

ALSO READ:  இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories