சென்னையில் சோகம்: பரங்கிமலை ரயில் நிலைய தடுப்புச் சுவரில் மோதி படிக்கட்டில் பயணித்த 7 பேர் உயிரிழப்பு

parangimalai railway station accident - 2026

சென்னை: சென்னையில் பெரும் சோக நிகழ்வாக, மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகள் 5 பேர், பரங்கிமலை ரயில் நிலைய கான்க்ரீட் தடுப்புச் சுவரில் மோதி அடுத்தடுத்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மாம்பலம் கோடம்பாக்கம் இடையே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதை அடுத்து எக்ஸ்ப்ரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் திருமால்பூர் செல்லும் ரயிலும் இயக்கப்பட்டது.

வழக்கமாகச் செல்லும் வழித்தடத்தில் இல்லாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரயிலில் பயணிகள் பலர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்துள்ளனர். ஏற்கெனவே மின் கம்பி அறுந்து விழுந்ததால், வழக்கமான ரயில் தடத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்ட நிலையில், கிடைத்த ரயிலில் ஏறிச் செல்லும் அவசரத்தில் பயணிகள் முண்டியடித்து ரயில்களில் ஏறியுள்ளனர். வழக்கமாகவே செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பயணிகள் அதிகளவில் ஏறிச் செல்லும் திருமால்பூர் ரயிலில் இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்துள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டதால் கூட்டம் அதிகரித்த நிலையில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பலர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் 3வது 4வது பிளாட்பாரத்துக்கு இடையில் எக்ஸ்ப்ரஸ் ரயில் வழித்தடத்தில் பிரிவுக்காகப் போடப்பட்டிருந்த கான்க்ரீட் சுவரில் மோதி கீழே விழுந்துள்ளர். இவ்வாறு 20க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்ததாகவும், அவர்களில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் சிலரது நிலை கவலைக்கு இடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

இதனிடையே, விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஐஜி வீரேந்திர குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் ரயில்வே கூடுதல் டிஜிபி., சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வது ஆபத்தானது என்றும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப் படும் என்றும் கூறினார். மேலும் அடிபட்டவர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களின் உடல்கள் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. மேலும் உயிரிழப்பு குறித்து தகவல் தெரியவில்லை. இந்தச் சுவர் இப்போது எழுப்பப்  பட்டதல்ல, வெகு காலமாகவே உள்ளது. எனவே புதிதாக இந்த சுவரையோ, மின் கம்பிகளையோ அப்புறப் படுத்த முடியாது. பயணிகள்தான், ஓரளவுக்கு மேல் கூட்டம் இருந்தால், படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்லக் கூடாது. ஒரு ரயிலில் கூட்டமாக இருந்தால் அடுத்த ரயிலில் செல்லலாம், அல்லது பஸ்சில் கூட செல்லலாம்… என்று கூறினார்.

முன்னதாக, நேற்றுதான் இதே பகுதியில் 2 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயிலில் தாம்பரத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஆகியோர் நேற்று பயணம் செய்துள்ளனர். அந்த ரயில், பரங்கிமலை அருகே சென்றபோது விக்னேஷின் தோள் பை, சிக்னலில் திடீரென மாட்டிக் கொண்டு இழுத்ததில், விக்னேஷ் தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். விக்னேஷைக் காப்பாற்ற முயன்ற ஸ்டீபனும் தவறி கீழே விழுந்ததில் அவர் மீது ரயில் ஏறி உயிரிழந்தார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் திருமால்பூர் ரயிலில் சென்ற பயணிகள் 5 பேர் பரங்கிமலை ரயில் நிலையத்தில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம், அந்த வழித் தடத்தில் செல்லும் பயணிகளிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, விபத்து நடந்த பாதை குறுகலாக உள்ளது என்றும், அந்தச் சுவரை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories