பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு: மேலும் ஒரு புலி மரித்துப் போனது!

Published:

vanabarathi mohanram - 2026

மரணத்தை முன்னே அறிந்தவர் தான்….
இயற்கை காதலன்…
வன பாரதி மோகன் ராம் …

பொதிகை வனபாரதி மோகன்ராம் மறைவு.
மேலும் ஒரு புலியை இன்று இழந்தோம்.

எனது வனம் இங்கே தான் மரித்துப் போவேன்
என்பது தான் இவரது கடைசி வார்த்தைகளாம்….

பொதிகை மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், பசுமையை நேசித்தவரும், தாமிரபரணியில் புதைந்து கிடந்த குப்பைகளையும், துணிகளை அப்புறப்படுத்தியும், தொடர்ந்து அரிய பணிகைளை ஆற்றிவந்த நண்பர் மோகன்ராம் மறைந்த வேதனையான செய்தி வந்துள்ளது.

நாய் கடித்துவிட்டது. ரேபீஸ் நோயால் சீக்கிரம் நான் இறந்துவிடுவேனய்யா என்று கடந்த இரண்டு மாதங்களாக எனது வீட்டிற்கு வந்து கண்ணீர் விட்டு அழுததெல்லாம் எனது மனதிற்குள் நினைவலைகளாக வந்தது.

உண்மையான சுற்றுச் சூழல் ஆர்வலர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் பிறந்து பொதிகை மலை, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி வரை சுற்றுச்சூழல் பணிகளை ஆற்றிய ஆர்வலரின் மறைவு தனிப்பட்ட வகையில் இழப்பு மட்டுமல்ல, பெரும் வேதனையும் தருகிறது.

ALSO READ:  FCRA சட்டம்; வெளிநாட்டு சதிகளும் உள்நாட்டு அரசியலும்!

அவருடைய புதல்வன் பாரதியுடன் என்னை சந்திக்க வருவதுண்டு. அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடைய நன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“விதியே விதியே தமிழச் சாதியை
என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ?”

#தாமிரபரணி #சுற்றுச்_சூழல்

– கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img