போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளித்த பெண் விவகாரம்: 2 அதிகாரிகள் காதிருப்புப் பட்டியலுக்கு மாற்றம்!

18 June10 Traffic polic - 2026

சென்னை: திருவேற்காடு பெண் தற்கொலை விவகாரகத்தில் காவல் ஆய்வாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை திருவேற்காடு செந்தமிழ்நகரைச் சேர்ந்தவர் ரேணுகா. இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். ரேணுகா வீட்டருகே வசிக்கும் அமிர்தவள்ளி என்பவருக்கும் கடந்த சில வாரங்களாக இடம் தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது.

திருவேற்காடு காவல் நிலையத்தில் ரேணுகா புகார் அளித்துள்ளார். புகார் அளித்த ரேணுகாவின் கணவர் கஜேந்திரனை திருவேற்காடு காவல் நிலையத்திற்கு பிடித்து வந்து விசாரித்துள்ளனர்.

இது குறித்து ரேணுகா திருவேற்காடு காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் கேட்டுள்ளார். மேலும் போலீசார் ரேணுகாவை ஆபாசமாக திட்டி விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து ரேணுகா நேற்று திருவேற்காடு காவல் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். படுகாயமடைந்த ரேணுகா கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலையில் உயிரிழந்தார்.

திருவேற்காடு காவல் ஆய்வாளர் அலெக்சாண்டர், உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் இதற்கு காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரேணுகா பதிவு செய்திருந்த ஆடியோவை உறவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories