ஆந்திர பஸ்கள் மீது தாக்குதல்; கல் வீச்சு; கொளுத்த முயற்சி

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கட்டைகளை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர மாநிலத்துக்கு எதிரான போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. பல இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், தீயிட்டுக் கொளுத்தவும் முயற்சி நடந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆத்மகுரு என்ற இடத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஆந்திர மாநில பஸ்சை ராமு (55) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் 40 பேர் இருந்தனர். அந்த பஸ் தமிழக எல்லையான தடாவை அடுத்த பூடி கிராமம் அருகே நேற்று மாலை 6 மணி அளவில் வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உருட்டுக்கட்டைகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆந்திர மாநில அரசு பஸ்சை வழிமறித்து பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். திடீரென பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டை பஸ் மீது வீசி தீ வைக்க முயற்சித்தனர். பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு தீ பிடிக்காமல் தடுத்தனர். மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார். சென்னையிலும் போலீசாரை உஷார் படுத்தி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் தொடர்புள்ள நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா அலுவலகம் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உருட்டுக்கட்டையுடன் நுழைந்த சிலர், திருப்பதி, சித்தூர், நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஐதராபாத் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ஆந்திர மாநில பஸ்களை குறிவைத்து தாக்கினர். 8 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பஸ்களை உடைத்ததாக, தமிழக முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாலன், அதியமான் என இருவர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து சென்னையில் இருந்து ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய அனைத்து பஸ்களும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் இருந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரவேண்டிய ஆந்திர மாநில பஸ்களும் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories