தென்காசி கோயில் தேரோட்டம்; தேர்வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

tenkasi car festival5 - 2026

தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய அம்சமாக வெள்ளிக்கிழமை இன்று காலை உலகம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ளது புகழ்பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவில். இந்தக் கோவிலில் ஐப்பசி மாத திருக்கல்யாண உத்ஸவத்தை முன்னிட்டு, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

tenkasi car festival1 - 2026

தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக, தொகுதி எம்.எல்.ஏ., மோகன்தாஸ், காவல் துறை உயரதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் என பலரும் தயாராக இருந்தனர். பக்தர்கள் தேரின் இடது புறமும் எம்எல்ஏ., அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரின் வலது புறமும் நின்று தேர் வடத்தைப் பிடித்து இழுத்தனர். தேர் நிலையை விட்டு நகர்ந்த சில அடிகளில், இடது புறம் இருந்த தேர் வடத்தின் இரும்புக் கம்பி அறுந்தது.

tenkasi car festival6 - 2026

இதைக் கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இரும்புக் கம்பிகளை சரி செய்ய நபர்கள் வரவழைக்கப்பட்டு அறுந்த கம்பி சீராக்கப்பட்டது. அதன் பின்னர் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக தடையின்றி நடைபெற்றது. தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

tenkasi car festival - 2026

தேரோட்டத்தின் தொடக்கத்தில் கம்பி அறுந்ததால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories