ஹிந்து கடவுள் சாத்தானா? கிறிஸ்துவ பள்ளி நாடகத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

thiruvannamalai christianschool - 2026

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்த இருந்ததும், இந்துக் கடவுளை சாத்தான் என்றும், ஏசுநாதர் இந்துக் கடவுளை பேய் விரட்டுவது போல விரட்டி விடும் வகையில் காட்சி அமைத்து நாடகம் நடத்த இருந்ததும் உள்ளூர் இந்து முன்னணியினருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த இந்து முன்னணியினர் பள்ளிக்கு விரைந்து சென்று அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையிடம் புகார் கூறியும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் போலீஸில் புகார் கடிதம் கொடுத்தனர்.

முன்னதாக பள்ளி முற்றுகைப் போராட்டம் நடந்த போது,போலீஸார் அங்கே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மோகன் ராஜ் என்பவர் செய்யாறு காவல் உதவி ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுல்…. ஐயா நான் மேற்கண்ட இயக்கத்தில் இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் இன்று மாலை 4 30 மணியளவில் செய்யாறு ஆற்காடு சாலையில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் இன்று ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது

அந்நிகழ்ச்சியில் இந்து கடவுள் சாத்தான் என்று கூறி நாடகம் நடைபெற இருந்தது. தகவலறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தோம். மேற்படி நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறுதலாக ஏற்பாடு செய்துவிட்டோம் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாட்டோம் என்றும் மேற்படி பள்ளி நிர்வாகமே ஒப்புக் கொண்டதால் இவர்கள் வேண்டுமென்றே இந்து மதத்தையும் இந்து கடவுளையும் மத மோதலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளார்கள்

எனவே இந்து மதத்தையும் இந்து கடவுளை இழிவுபடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் பள்ளியின் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

தவறும் பட்சத்தில் மாவட்ட அளவில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மை என்ற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, பெரும்பான்மை மதத்தையும் உணர்வுகளையும் கலாசாரத்தையும் கடவுளையும் இழிவு படுத்தும் இது போன்ற கேவலங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது என்று பொருமித் தள்ளினர் அங்கிருந்த பொதுமக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories