ஹிந்து கடவுள் சாத்தானா? கிறிஸ்துவ பள்ளி நாடகத்தை தடுத்து நிறுத்திய இந்து முன்னணி!

thiruvannamalai christianschool - 2026

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் இந்து கடவுளை இழிவுபடுத்தும் வகையில் நாடகம் நடத்த இருந்ததும், இந்துக் கடவுளை சாத்தான் என்றும், ஏசுநாதர் இந்துக் கடவுளை பேய் விரட்டுவது போல விரட்டி விடும் வகையில் காட்சி அமைத்து நாடகம் நடத்த இருந்ததும் உள்ளூர் இந்து முன்னணியினருக்கு தெரியவந்தது.

தகவலறிந்த இந்து முன்னணியினர் பள்ளிக்கு விரைந்து சென்று அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் காவல்துறையிடம் புகார் கூறியும் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியும் போலீஸில் புகார் கடிதம் கொடுத்தனர்.

முன்னதாக பள்ளி முற்றுகைப் போராட்டம் நடந்த போது,போலீஸார் அங்கே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து மோகன் ராஜ் என்பவர் செய்யாறு காவல் உதவி ஆய்வாளரிடம் அளித்த புகார் மனுல்…. ஐயா நான் மேற்கண்ட இயக்கத்தில் இந்து சமுதாய பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் இன்று மாலை 4 30 மணியளவில் செய்யாறு ஆற்காடு சாலையில் அமைந்திருக்கும் சென் ஜோசப் பள்ளியில் இன்று ஆண்டுவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது

அந்நிகழ்ச்சியில் இந்து கடவுள் சாத்தான் என்று கூறி நாடகம் நடைபெற இருந்தது. தகவலறிந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அந்தப் பள்ளிக்குச் சென்று பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தோம். மேற்படி நிர்வாகம் அந்த நிகழ்ச்சியை நாங்கள் தவறுதலாக ஏற்பாடு செய்துவிட்டோம் அதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த மாட்டோம் என்றும் மேற்படி பள்ளி நிர்வாகமே ஒப்புக் கொண்டதால் இவர்கள் வேண்டுமென்றே இந்து மதத்தையும் இந்து கடவுளையும் மத மோதலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்துள்ளார்கள்

எனவே இந்து மதத்தையும் இந்து கடவுளை இழிவுபடுத்தும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் பள்ளியின் தாளாளர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

தவறும் பட்சத்தில் மாவட்ட அளவில் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மை என்ற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு, பெரும்பான்மை மதத்தையும் உணர்வுகளையும் கலாசாரத்தையும் கடவுளையும் இழிவு படுத்தும் இது போன்ற கேவலங்கள் வேறு எந்த நாட்டிலும் நடக்காது என்று பொருமித் தள்ளினர் அங்கிருந்த பொதுமக்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories