கோவை சிறுமி பாலியல் கொடுமைக் கொலை தொடர்பில் ஒருவர் கைது!

girlmolest - 2026

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் கொடுமை செய்யப் பட்டு கொல்லப் பட்ட விவகாரத்தில் ஒருவர் போலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அவரது வீட்டின் அருகே கடந்த மார்ச் 26 ஆம் தேதி சடலமாகக் கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கையில், அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு கொலை செய்யப் பட்டிருப்பது தெரியவந்தது. சிறுமியின் வாயை துணியால் கட்டி அடைத்து, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வன்கொடுமை செய்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப் பட்டது!

தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்தச் சம்பவம் குறித்து உடனே விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டனை அளிக்க வேண்டும் என்று பலரும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், குற்றவாளிகள் குறித்து விவரம் தெரிந்தால் அதனை தங்களுக்கு உடனே தெரிவிக்கும்படியும், தகவல் தருபவர் ரகசியம் காக்கப்படும், அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றெல்லாம் போலீசார் தகவல் வெளியிட்டனர்.

இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பில் விசாரிக்க போலீசார் 10 தனிப்படைகள் அமைத்தனர். விசாரணையும் நடத்தப் பட்டு வந்தது. இந்நிலையில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் ஒப்புக் கொண்டதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து அவரிடம் விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

Entertainment News

Popular Categories