திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய போதை இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

theruppur bus stand - 2026
தமிகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் பனியன் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் திருப்பூர் நகர பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டி வந்தார். நடத்துனராக ராமசாமி என்பவர் இருந்தார்.
இந்த பஸ் பழைய பஸ்நிலையத்திற்குள் நுழைந்த போது, மதுபோதையில் இருந்த 2 இளைஞா்கள் திடீரென பஸ்சில் குறுக்கே சென்றுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த 2 இளைஞா்களிடமும் இதுகுறித்து டிரைவர் மற்றும் நடத்துனர் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த போதை இளைஞா்கள் பஸ்சில் ஏறி நடத்துனரை தாக்கியுள்ளனர். மேலும், அவரை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து, உதைத்து ரகளையில் ஈடுபட்டனா். இதில் நடத்துனர் ராமசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பஸ் பயணிகள் மற்றும் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் உண்மை நிலையை தெரிந்து கொண்ட அவர்கள், அந்த போதை இளைஞா்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்த நடத்துனரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த போதை இளைஞா்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, அந்த இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பஸ்நிலையத்தின் உள்ளே இருந்த புறக்காவல் நிலையத்தை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து பொதுமக்கள், பயணிகள், போக்குவரத்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனர்..இதனையடுத்து போதையில் இருந்த இளைஞா்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரவி(வயது 24) மற்றும் அவருடைய நண்பர் சூர்யா(26) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்நிலையத்தில் வைத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது போதை இளைஞா்கள் தாக்குதல் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories