திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய போதை இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

theruppur bus stand - 2026
தமிகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் பனியன் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் திருப்பூர் நகர பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டி வந்தார். நடத்துனராக ராமசாமி என்பவர் இருந்தார்.
இந்த பஸ் பழைய பஸ்நிலையத்திற்குள் நுழைந்த போது, மதுபோதையில் இருந்த 2 இளைஞா்கள் திடீரென பஸ்சில் குறுக்கே சென்றுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த 2 இளைஞா்களிடமும் இதுகுறித்து டிரைவர் மற்றும் நடத்துனர் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த போதை இளைஞா்கள் பஸ்சில் ஏறி நடத்துனரை தாக்கியுள்ளனர். மேலும், அவரை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து, உதைத்து ரகளையில் ஈடுபட்டனா். இதில் நடத்துனர் ராமசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பஸ் பயணிகள் மற்றும் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் உண்மை நிலையை தெரிந்து கொண்ட அவர்கள், அந்த போதை இளைஞா்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்த நடத்துனரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த போதை இளைஞா்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, அந்த இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பஸ்நிலையத்தின் உள்ளே இருந்த புறக்காவல் நிலையத்தை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து பொதுமக்கள், பயணிகள், போக்குவரத்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனர்..இதனையடுத்து போதையில் இருந்த இளைஞா்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரவி(வயது 24) மற்றும் அவருடைய நண்பர் சூர்யா(26) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்நிலையத்தில் வைத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது போதை இளைஞா்கள் தாக்குதல் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories