திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூாில்   நடத்துனா் மீது போதை இளைஞா்கள் கொலைவெறி தாக்குதல்..!

திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் அரசு பஸ் நடத்துனரை தாக்கிய போதை இளைஞா்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

theruppur bus stand - 2026
தமிகத்தில் ஆடை வடிவமைப்பு மற்றும் பனியன் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் திருப்பூர் நகர பழைய பஸ்நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை டிரைவர் தங்கவேல் ஓட்டி வந்தார். நடத்துனராக ராமசாமி என்பவர் இருந்தார்.
இந்த பஸ் பழைய பஸ்நிலையத்திற்குள் நுழைந்த போது, மதுபோதையில் இருந்த 2 இளைஞா்கள் திடீரென பஸ்சில் குறுக்கே சென்றுள்ளனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார்.

பின்னர் அந்த 2 இளைஞா்களிடமும் இதுகுறித்து டிரைவர் மற்றும் நடத்துனர் கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த போதை இளைஞா்கள் பஸ்சில் ஏறி நடத்துனரை தாக்கியுள்ளனர். மேலும், அவரை பஸ்சில் இருந்து வெளியே இழுத்து வந்து அடித்து, உதைத்து ரகளையில் ஈடுபட்டனா். இதில் நடத்துனர் ராமசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த பஸ் பயணிகள் மற்றும் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடினார்கள். பின்னர் உண்மை நிலையை தெரிந்து கொண்ட அவர்கள், அந்த போதை இளைஞா்களை மடக்கி பிடித்து அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் காயமடைந்த நடத்துனரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த போதை இளைஞா்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதற்கிடையே, அந்த இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, பஸ்நிலையத்தின் உள்ளே இருந்த புறக்காவல் நிலையத்தை போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து பொதுமக்கள், பயணிகள், போக்குவரத்து தொழிலாளா்கள் கலைந்து சென்றனர்..இதனையடுத்து போதையில் இருந்த இளைஞா்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ரவி(வயது 24) மற்றும் அவருடைய நண்பர் சூர்யா(26) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்நிலையத்தில் வைத்து அரசு போக்குவரத்து ஊழியர்கள் மீது போதை இளைஞா்கள் தாக்குதல் நடத்தியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories