விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 குழந்தைகள் உயிரிழப்பு!

villupuram gh விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2 ஆண் குழந்தைகள் உள்பட 3 குழந்தைகள் உயிரிழந்ததால், குழந்தைகளின் தாய் மற்றும் உறவினர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. புதன்கிழமை நேற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் உயிரிழந்தன. இந்தச் சம்பவம் விழுப்புரம் உள்பட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகளில் 7 குழந்தைகள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தன. இந்தக் குழந்தைகளில் உளுந்தூர்பேட்டை- ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனார்த்தனனின் 27 நாள் ஆன பெண் குழந்தை, திருக்கோவிலூர்- ரங்கராஜநல்லூரைச் சேர்ந்த இளையராஜாவின் 3 நாள் ஆண் குழந்தை, திருக்கோவிலூர் ஏமபேர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷின் 4 நாள் ஆண் குழந்தை, சங்கராபுரம்- சீர்பனந்தலைச் சேர்ந்த முனியனின் 3 நாள் ஆண் குழந்தை என 4 குழந்தைகள் புதன்கிழமை அடுத்தடுத்து உயிரிழந்தன. குழந்தைகள் இறப்பு குறித்து, மருத்துவமனை மருத்துவர்கள் கூறியபோது, இறந்த குழந்தைகளில் 3 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துள்ளன. மற்றொரு குழந்தை பிறந்து 27 நாள்கள் ஆகியிருந்தது. அந்தக் குழந்தையை பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தனர். பின்னர், உடல் நலம் பாதிக்கப்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்தக் குழந்தைக்கு கிருமி தொற்று ஏற்பட்டிருந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அந்தக் குழந்தை இறந்துவிட்டது என்று கூறினர். ஆனால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் உஷா சதாசிவம் இது குறித்துக் கூறியபோது, குழந்தைகள் எடை குறைவாகப் பிறந்திருந்தன. அந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தைகளைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரே நேரத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் இது பெரிதாகப் பார்க்கப்படுகிறது என்றார். இந்நிலையில், இன்று காலை வரை அங்கே சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 குழந்தைகளும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories