சென்னை: ஆந்திராவில் இருபது தமிழர்களை சுட்டு வீழ்த்திய ஆந்திர மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் (TUJ)சார்பில் புதன்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் D.S.R.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சை தமிழ்ப்பித்தன் வரவேற்றார். காங்கிரஸ் கட்சி சார்பில் அமெரிக்கை நாராயணன், அ,தி.மு.க.சார்பில் ஆவடி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஜாகுவார் தங்கம், CPMA வெங்கட்ராஜ், ஆரணி C,குணசேகரன், கோவை A.K.பிரபாகரன், பரபரப்பு செய்தி ராமநாதன், மற்றும் TUJ நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். D.அல்லாபகேஷ், சார்லஸ் S.குணசேகரன்,G.மேகராஜன், பிப்பிள் டுடே G.சத்யநாராயண், நமது நகரம் சரவணன், V.அனந்தராமன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 100க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆந்திர அரசை கண்டித்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
Popular Categories


