பாவூர்சத்திரத்தை அடுத்த மேலப்பாவூர் கீழக்காலனி தெருவை சேர்ந்த அன்புசெல்வம் அவரது மனைவி சமுத்திரக்கனி. இவருக்கும் இதே தெருவை சேர்ந்த பகவதி (70), உஷா (27), லட்சுமி (50) ஆகியோர் பொதுகுழாயில் தண்ணீர் பிடிப்பதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் தண்ணீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் பகவதி, உஷா, லட்சுமி ஆகியோர் சேநர்த சமுத்திரக்கனி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த அன்பு செல்வமும் தாக்கப்பட்டார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் . புகாரின் பேரில் சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட பகவதி, உஷா, லட்சுமி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மூவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
தண்ணீர் பிடிப்பதில் தகராறு
Popular Categories


