சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில், ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்த மாயராஜ் மனைவி சண்முக பிரியா(26). இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாயராஜ் சாத்தூர் – விளாத்திகுளம் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாயராஜ் பணி முடிந்து வீட்டுக்கே வருவதில்லையாம். மேலும் வீட்டுச் செலவுக்கும் பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சண்முக பிரியா கணவர் வேலை பார்க்கும் இடத்துக்குச் சென்றுள்ளார். அங்கே மாயராஜைப் பார்த்து வீட்டுக்கு ஏன் வரவில்லை? எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சாத்தூர்- விளாத்திகுளம் பஸ்சில் மாயராஜ் ஏறியுள்ளார். அப்போது சண்முகப் பிரியாவும் அதே பஸ்சில் ஏறி, நீ வீட்டுக்கும் வருவதில்லை. குடும்பச் செலவுக்கும் பணம் கொடுப்பதில்லை, என்ன பிரச்னை என மாயராஜிடம் கேட்டுள்ளார். அதற்கு மாயராஜன் நீ வீட்டுக்குச் செல், நான் பிறகு வந்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை அடைந்த சண்முக பிரியா ஓடும் பஸ்சில் இருந்து திடீரென குதித்ததில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Less than 1 min.Read
கணவனுடன் தகராறு: ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து பெண் தற்கொலை
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
அரசியல்
ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
உலகம்
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
அரசியல்
ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
உலகம்
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
உரத்த சிந்தனை
திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?
தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.
மதுரை
குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்
தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்
அரசியல்
திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
விளையாட்டு
ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?
சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

