விழுப்புரம் மருத்துவமனையில் 8 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு; அமைச்சர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 பச்சிளம் குழந்தைகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து உயிரிழந்தன. அந்த மருத்துவமனைக்கு அமைச்சர் நேரில் சென்று விசாரித்தறிந்தார். விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்படிருந்த சீர்ப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த முனியன்-கோவிந்தம்மாள் தம்பதியரின் 4 நாள் ஆன ஆண் குழந்தை, ஏமப்பேரைச் சேர்ந்த ராகேஷ்-பார்வதி தம்பதியரின் 2 நாள் ஆன ஆண் குழந்தை, கெங்கராயநல்லூரைச் சேர்ந்த இளையராஜா-கலா தம்பதியரின் ஆண் குழந்தை, உளுந்தூர்பேட்டை ஜனார்த்தனன்-இந்திரலேகா தம்பதியின் பெண் குழந்தை ஆகியவை புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து உயிரிழந்தன. இதை அடுத்து சென்னையில் இருந்து மருத்துவக் குழுவினர் இங்கே ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தொடர்ச்சியாக குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கராபுரம் கடம்பூரைச் சேர்ந்த பரத்-ரேவதி தம்பதியரின் 12 நாள் ஆன ஆண் குழந்தை புதன்கிழமை மாலையிலும், சாலாம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்-ரம்யா தம்பதியரின் 17 நாள் ஆன ஆண் குழந்தை இரவிலும் உயிரிழந்தது. பின்னர் விருத்தாசலத்தை அடுத்த தொட்டில்மேட்டைச் சேர்ந்த சிவசக்தி-முருகன் தம்பதியரின் 4 நாள் ஆன பெண் குழந்தை இரவு 11 மணியளவில் இறந்தது. இந்த மூன்று குழந்தைகளும் குறைப் பிரசவத்தில் எடைக் குறைவாகவும், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அன்பு புதன் அன்று தனது பெண் குழந்தையை இங்கே சேர்த்துள்ளார். அவரது குழந்தையும் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளது. இதயத் துடிப்பு குறைவாக இருந்த நிலையில், அது உயிரிழந்துள்ளது. இவ்வாறு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரு நாள்களில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இங்கே சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமானால் மேல் சிகிச்சைக்குக் கொண்டு செல்ல வசதியாக இன்குபேட்டர் வசதியுடன் கூடிய 2 ஆம்புலன்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தை அடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வு-குடும்ப நலத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். உடனடியாக மருத்துவர்களிடம் விவாதித்தனர். பின்னர் குழந்தைகள் வார்டுக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகள் உடல்நிலை குறித்து இருவரும் கேட்டறிந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

Topics

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Entertainment News

Popular Categories