April 23, 2025, 7:41 PM
30.9 C
Chennai

பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள், தல வரலாறு பயிற்சி பட்டறை!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

மதுரை, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரம்பரிய பூர்வீக கோவில்களின் கட்டமைப்பு, ஆன்மீக அம்சங்கள் மற்றும் தல வரலாறு பயிற்சி பட்டறை கல்லூரி நூலகம், சமஸ்கிருத துறை மற்றும் காந்திகிராம் லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி சார்பில் நடைபெற்றது. கல்லூரி இறை வணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உடன் நிகழ்ச்சி தொடங்கியது. சமஸ்கிருதத்துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்புரை ஆற்றினார்.

கல்லூரிச் செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். ஆர். எஸ். எஸ் .மண்டல பி.ஆர்.ஓ.கணேஷ்பாபு துவக்க உரை ஆற்றினார். விவேகானந்த கல்லூரி மாணவர் சங்கச் செயலர் முனைவர் தீனதயாளன் கல்லூரியின் மேனாள் முதல்வர்  முனைவர் வன்னியராஜன் சிறப்புரை ஆற்றினர். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

ALSO READ:  சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!

கல்லூரியின் மேனாள் துணை முதல்வர் முனைவர் இளங்கோ மேனாள் விலங்கியல் துறை பேராசிரியர் சந்திரன் கல்லூரியின் அகத்திர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு லட்சுமி கல்வியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் லட்சுமி கல்வியல் கல்லூரியின் நூலகர் முனைவர் சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பயிற்சி பட்டறையில் மேனாள் சமஸ்கிருத துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தராமன் கோவில்களில் பொதுவான வடிவமைப்பு என்ற தலைப்பிலும், கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியர் முனைவர்  கரிகாலன் ஒரு கோவிலின் வரலாற்றை எழுதுவதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பிலும், விவேகானந்த கல்லூரி சமஸ்கிருதத் துறை தலைவர் முனைவர் ஸ்ரீதர் சுவாமிநாதன் சிவபெருமானின் உருவ சின்னங்கள் என்ற தலைப்பிலும் சிறப்பு பட்டறை பயிற்சியுடன் உரையாற்றினர்.

இறுதி நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன் சிறப்புரை ஆற்றினார். கல்லூரி நூலகர் முனைவர் பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியினை வணிகவியல் துறை உதவி பேராசிரியர்கள் முனைவர் வடிவேல் மற்றும் முனைவர் வடிவேல் ராஜா ஒருங்கிணைத்தனர். நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

ALSO READ:  சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

இயற்கை விவசாயம் மூலம் அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்!

நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

TN Raj bhavan condemns intentional media reports

Some misleading media reports regarding the forthcoming annual conference of leaders of higher educational institutions including Central,

மாநில அரசுடன் சிண்டு முடிக்கும் வேலையை ஊடகங்கள் செய்வது தவறு!

இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.

தேசத்தின் துக்க நாள்: இந்து முன்னணி கண்டனம்!

மோட்ச தீபம் ஏற்றி பலிதானிகள் ஆன்மாவிற்கு வேண்டுதல் வைப்போம். அத்துடன் பயங்கரவாதம் முற்றிலும் ஒழித்திட சபதம் ஏற்க இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 23 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

IPL 2025: டெல்லி அணியின் திரில்‌ வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் –...

காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுட்டதில் சுற்றுலா பயணியர் 26 பேர் உயிரிழப்பு!

பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது சவுதி சுற்று பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்புகிறார். இன்றிரவு இரண்டு மணிக்கு டில்லி திரும்புகிறார்...

மக்கள் உடல்நலத்துடன் விளையாடி, ஹிந்து விரோத மனப்பான்மையை வெளிப்படுத்தும் அமைச்சர் நேரு!

அதுவே கோவில் விழாக்களில் வேற்று மதத்தினர் குளிர்பானங்கள் வழங்குகின்றனர். ஆனால் அதனை மத நல்லிணக்கம் என விளம்பரப் படுத்தி பாராட்டுகிறது இதே அரசு.

Entertainment News

Popular Categories