December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

தாமிரபரணித் தாய்க்கு ஆடி சீர் அளித்து ‘மாத்ரு சக்தி’ அமைப்பினர் வழிபாடு!

tamirabarani seer1
tamirabarani seer1

நெல்லையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு ஆற்றங்கரையில் தாமிரபரணி அன்னைக்கு பெண்கள் சீர் செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள நதிக்கரைகளில் பெண்கள் சீர்செய்து சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடி பதினெட்டு ஆடிப்பெருக்கு வைபவம் நேற்று கொண்டாடப்பட்டது.

tamirabarani seer2
tamirabarani seer2

பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் நெல்லை தாமிரபரணி நதியை தாய்போல் பாவித்து கருப்பு வளையல் கருகுமணி மஞ்சள் தேங்காய் பழம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை படித்துறையில் வைத்து தாமிரபரணி தீர்த்தத்தை தலையில் தெளித்து சீர்வரிசை பொருட்களை தாமிரபரணிக்கு படைத்து வழிபடுவது வழக்கம். இதுபோல் இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

tamirabarani seer3
tamirabarani seer3

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பான மாதுர் சக்தி சார்பில் நெல்லையில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆடி பதினெட்டாம் பெருக்கு வைபவத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் திரண்ட பெண்கள் சீர்வரிசைப் பொருட்களை தாமிரபரணி அன்னைக்கு வழங்கி அபிஷேக ஆராதனைகள் நடத்தி மாங்கல்ய சரடுகளை வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.

tamirabarani seer5
tamirabarani seer5

சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் நீடிக்கவும் குடும்ப ஒற்றுமை பேணவும் தாமிரபரணி அன்னையை நினைத்து வழிபடுகின்றனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் ஆறுமுக கனி, இணை செயலாளர் பால விக்னேஷ், மாத்ரு சக்தி மாவட்ட பொறுப்பாளர் கருப்பாயி, பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளர் முத்துராம், இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பாஜக வக்கீல் அணி மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் உதயசங்கர், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் மற்றும் மாத்ரு சக்தி அமைப்பினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

tamirabarani seer6
tamirabarani seer6

தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி பேணப்பட்டு இந்த நிகழ்ச்சி அமைதியாக நடந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories